அவிநாசி,டிச.27 அவிநாசி அருகே தொட் டகளாம்புதூர் கிராமப் பகு தியில் சாக்கடை கால்வாய் பாதியுடன் நிறுத்தப்பட்டுள் ளதால், நோய்த் தொற்று ஏற் பட வாய்புள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். அவிநாசி ஒன்றியம், ராம நாதபுரம் ஊராட்சிக்கு உட் பட்ட தொட்டகளாம் புதூர் பகுதியில் நூற்றுக்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி விநாயகர் கோவில் அருகாமையில் சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால் வாய் ஆரம்பிக்கப்பட்டு, பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள தால், அப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், குடியிருப்பு வாசிகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல, இப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் பலமுறை தெரிவித் தும் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் இல்லாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.