ஈரோடு, நவ.30- மூவலூர் இராமாமிர்தம் அம் மையார் திருமண உதவித்திட்டம் நிறுத்தப்பட்டதை திரும்பப்பெற வேண்டும் எனவும், ஸ்ரீமதியின் இறப்புக்கு நீதிகேட்டு நடைபெற்ற ஜனநாயக போராட்டத்தில் அத்து மீறலில் ஈடுபட்ட தமிழக காவல் துறைக்கு அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழு கூட்டம் அண்மையில் ஈரோட் டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, அகில இந்திய துணைச் செயலாளர் பி.சுகந்தி, மாநில தலைவர்களில் ஒருவரு மான கே.பாலபாரதி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச்செயலாளர் ஏ.ராதிகா, மாநிலப் பொருளாளர் வி.பிரமிளா, மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய் உட்பட மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் இறப்புக்கு நீதி கேட்டு தமிழக டிஜிபி அலுவ லகம் முன்பு மாதர் சங்கம் நடத்திய போராட்டத்தில் காவல்துறை அத்து மீறலை கண்டித்தும், போராட்டத் தில் கலந்து கொண்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழக அரசால் ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு வழங்கப்பட்ட மூவலூர் இராமாமிர் தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் நிறுத்தப்பட்டதை திரும்பப் பெற வேண்டும். முதியோர், ஆதர வற்றோர், விதவைகள் உதவித் தொகை கோரி விண்ணப்பித்த தகு தியான அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். நிறுத் தப்பட்ட உதவித்தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.