தாராபுரம், டிச. 20- ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களின் சார்பில் கோவை தலைமை அலுவலகம் முன்பு நடைபெற இருக்கும் மறியல் போராட்டத்தில், திரளாக கலந்து கொள்வது என போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தாராபுரம் ஐந்து முனை சந்திப்பு அருள்ஜோதி ஆசிரம மண்டபத்தில் பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட் டத்திற்கு கே.வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். பேரவைக் கூட்டத்தில் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு டி.ஏ. வழங்க நீதிமன்றம் உத்திரவிட்டும் அமுலாக்காத அர சின் போக்கை பொதுமக்கள் மத்தியில் போஸ்டர் மற்றும் நோட்டீஸ் மூலம் அம்பலப்படுத்தும் வகையில் இயக்கம் நடத்துவது வருகின்ற 29 ஆம் தேதி கோவை தலைமை அலு வலகம் முன்பு நடைபெற இருக்கும் மறியல் போராட்டத் தில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில துணை பொதுச் செயலாளர் ப.செல்வராசன் மற்றும் கிளை நிர்வாகிகள் என்.செங்குட்டுவன், எம்.நடரா ஜன், கே.வெள்ளைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் என்.முத்துசாமி நன்றி தெரிவித்தார்.