சேலம், ஜூன் 30- சேலத்தில் ராணுவ தடவாள தொழிற் சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் மாவட்ட சிறப்பு மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது. ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்து அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் மாவட்ட சிறப்பு மாநாடு சேலம் ஒய்எம்சிஏ அரங்கத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இம்மா நாட்டிற்கு, ஏஐடியுசி மாவட்ட செயலா ளர் எம்.முனுசாமி தலைமை ஏற்றார். பொதுத்துறை நிறுவனங்களை தனி யார் மயமாக்கக்கூடாது. விவசாயிக ளின் விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை திருத்தக் கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். சேலத்தில் ராணுவ தடவாள தொழிற்சாலை அமைக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. மேலும், இக்கோரிக்கைகளை விளக்கி ஜூலை இரண்டாவது வாரத் தில் பிரச்சாரம் மற்றும் ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்று சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில், சிஐடியு மாநில உதவி செயலாளர் டி.உதயகுமார், ஐஎன் டியுசி தமிழ் மாநில பொதுச் செயலாளர் வி.கே.நல்லமுத்து, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் கே.கண்ணன், எஸ்டியு மாநிலச் செயலாளர் ஏ.சையது அலி, சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ. கோவிந்தன், ஏஐசிசிடியு கே. நடராஜன், ஏஐடியுசி வி.முருகன், எச்எம்எஸ் அர்ஜு னன், கணேசன் உள்ளிட்ட திரளான தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்ட னர்.