நாமக்கல், செப்.30- காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சங்க பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் கள் சங்க மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் குமாரபாளையம் சங்க அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. பேரவைக் கூட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வி.சண்முகம் தலைமை தாங்கினார். கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் இ.கே.முருகன், சிபிஎம் நகரச் செயலாளர் என்.சக்திவேல், விதொச மாவட்ட தலைவர் சி.துரை ஆகியோர் உரை யாற்றினர். தமிகத்தில் உள்ள 43 சாக்கரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கான காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும். இதற்கான பிரிமியம் தொகையை ஆலை நிர்வாகம் ஏற்க வேண்டும். கரும்பு வெட்டும் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தால் தொழிலாளர்கள் குடும்பத் திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்துள்ள தட்டாங்குட்டை, கொக்கராயன் பேட்டை விவசாய தொழிலாளர் களுக்கு வீட்டுமனை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு பேரவையின் தலைவராக கே.சந்திரா, செயலாளராக ஆர்.குருசாமி, பொருளாளராக ராஜா, துணைத் தலைவர் களாக சம்பூரணம், சண்முகம், துணைச் செயலாளராக சீ. துரைசாமி, ஆர்.பழனிசாமி மற்றும் 15 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.