திருப்பூர், மே 1 - இடுவாய் ஊராட்சியை திருப்பூர் மாநக ராட்சியுடன் இணைக்கக்கூடாது என்று மே தினத்தன்று நடைபெற்ற இடுவாய் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் ஏகமனதாக தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி யில் உள்ள சீராணம்பாளையத்தில் உள்ள அரச மர மைதானத்தில் திங்களன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.பரமசிவம், வார்டு உறுப்பினர் கள் பி.ஈஸ்வரி, ஆர்.ஈஸ்வரி, எம்.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட சட் டப்பணி குழு சார்பாக வழக்கறிஞர் ராஜசே கரன், கிராம நிர்வாக அலுவலர், விவசாயத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளும், உள் ளாட்சி அதிகாரிகளும் வந்திருந்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் முன்மொழிந்த நான்கு தீர்மானங்களும் ஏகமனதாக கிராம சபையில் நிறைவேற்றப்பட்டது.
இடுவாய் ஊராட்சியை திருப்பூர் மாந கராட்சியோடு இணைத்தால் தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த வர்களுக்கு வேலை இழப்பும், பொருளாதார பாதிப்பும் ஏற்படும் என்ற காரணத்தாலும், உள்ளாட்சிப் பணிகள் விரைந்து நடைபெறு வதில் தாமதம் ஏற்படும் என்கிற காரணத்தா லும் இடுவாய் ஊராட்சியை திருப்பூர் மாந கராட்சியோடு இணைக்கக்கூடாது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமும், ஒன்றிய அரசும் இணைந்து வழங்கி வந்த வறு மைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மானியத் தில் வீடு கட்டும் திட்டம் (ரூபாய் இரண்டு லட் சத்து 10 ஆயிரம் மானியம்) கடந்த ஓராண்ட ராக செயல்படுவதில்லை. எனவே அந்தத் திட்டத்தை செயல்படுத்த உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் தமிழக அரசால் கொண்டு வரப் பட்ட 12 மணி நேரம் தொழிலாளர்கள் பணி யாற்ற வேண்டும் என்ற சட்ட திருத்தம் தற் காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் அந்த சட்ட திருத்தத்தை திரும் பப் பெற்றதற்கு தொழிலாளர் தினமான மே தினத்தன்று இந்த கிராம சபை மூலம் அவ ருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இடுவாயில் செயல்பட்டு வரும் அரசு மது பான கடையை அகற்றக்கோரி கடந்த பல வரு டங்களாக கிராம சபையில் தீர்மானம் நிறை வேற்றியும், நாடாளுமன்ற உறுப்பினர் தலை மையில் போராட்டம் நடத்தியும் கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. எனவே தமிழக அரசு இந்த அரசு மதுபான கடையை வேறு பகு திக்கு மாற்றும் வரை இங்கு மது விற்ப னையை உடனடியாக நிறுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நூற்றுக்கணக்கான பொது மக்களுடன் சிறப்பாக நடைபெற்ற கிராம சபையில் பார திய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், மதுபான கடையை அகற்றாததால் ஊராட்சி தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என தகராறு செய்தனர். கிராம சபையில் பங்கேற்ற பொதுமக் கள் ஒரு லிட்டர் பெட்ரோல் 40 ரூபாய்க்கு கொடுப்பேன் எனவும், சமையல் சிலிண்டர் 400 ரூபாய்க்கு கொடுப்பேன் எனவும், வரு டம் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் எனவும், ஒவ் வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் ரூபாய் தரு வேன் என சொன்ன ஒன்றிய அரசின் பிரதமர் முதலில் ராஜினாமா செய்யட்டும் என முழக்க மிட்டனர். ஊராட்சி தலைவர் விளக்கம் அளித்து பேசும்போது, மதுபான கடை வைக்கலாமா, வேண்டாமா என்ற அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு இல்லை. ஜனநாயக முறைப் படி எதிர்ப்பு தெரிவித்து போராட மட்டுமே அதி காரம் உள்ளதாகவும், அதை தாங்கள் இடை விடாது செய்து வருவதாகவும் விளக்கம் அளித்தார். பாரதிய ஜனதா கட்சியினர் அரசியல் காழ்ப் புணர்ச்சியுடன் இத்தகைய பொய்யான குற்றச் சாட்டுகளை தொடர்ந்து மேற்கொண்டு வரு வதற்கு தனது கண்டனத்தையும் தெரிவித் தார். கிராம சபையில் கலந்த கொண்ட பொது மக்களும் பாஜக-வினரின் நடவடிக்கைக ளுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஊராட்சி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொது மக்களின் கோரிக்கை மனுக்களை ஊராட்சி தலைவர் பெற்றுக் கொண்டார். கோரிக்கைகள் மீது உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். கிராம சபையின் இறுதி நிகழ்ச்சியாக கலந்து கொண்ட அனைவரும் கிராமத்தின் சுகாதா ரத்தை பேணிக் காக்கும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியோடு கிராம சபை நிறைவுற்றது.