உடுமலை, ஜூலை 27- மடத்துக்குளம் அரசு மருத்துவம னையில் உள்ள அனைத்து துறைக ளுக்கும் மருத்துவர்களை நியம னக்க வேண்டும் என அரசு அனைத் துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மடத்துக்குளம் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 7 ஆவது வட்டகிளை மாநாடு சிஐடியு அலுவலகத்தில் சனியன்று நடை பெற்றது. இதில், அரசு ஊழியர்கள் சங்கத்தின் முருகசாமி, சிவக்குமார், பாலசுப்பிரமணியம் மற்றும் சிஐடியு சங்கத்தின் ஆர்.வி.வடிவேல், ஆர். பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த மாநாட்டில், மடத்துக் குளம் தனி தாலுகாவாக அறிவிக் கபட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், பேருந்து நிலையம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பொது சுகாதாரம் முறையாக செயல் படுவது இல்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்க எவ்வித மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாமல் உள் ளது. அரசு பொது மருத்துவமனை யில் பெயருக்கு மட்டுமே மருத்துவர் கள் உள்ளார்கள். அவசர சிகிச் சைக்கு உடுமலை அல்லது கோவைக்கு செல்ல வேண்டிய நிலை தொடர்வதால், மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள் எனவே மருத்துவமனைக்கு அனைத்து துறைகளுக்கும் மருத்து வர்கள் நியமனம் செய்ய வேண்டும். ரயில் நிலையத்தில் அனைத்து ரயில் களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு துறையில் சம வேலை சம ஊதியம் என்ற நடை முறையை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இருக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்து, புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தலைவராக ராமதுரை, செயலாள ராக கருணாநிதி, பொருளாளராக பர ஹெத்துல்லாஹ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். நிறைவாக புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் எஸ்.பாலகிருஷ்ணன் பேசினார். இதில் பலர் கலந்து கொண்டார்கள்.