districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காவிரி உபரிநீர் திட்டத்தை விரிவுப்படுத்த மாவட்ட ஊராட்சிக்குழுவில் தீர்மானம்

சேலம், ஆக.20- காவிரி உபரிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் எனக்கோரி சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் நாட்டாமை கட்டிட வளாகத்தில் அமைந் துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட  ஊராட்சிக்குழு கூட்டம், தலைவர் ரேவதி ராஜசேகரன் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில், காவேரி உபரிநீர் திட்டத்தின்படி, காளிப் பட்டி ஏரியில் இருந்து புக்கம்பட்டி ஏரிக்கும், அதிலிருந்து ரங்கனூர் ஏரிக்கும் நீர்வரத்து கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும். மேலும், காடையாம்பட்டி வட்டம், கொங்குபட்டி கிராமம், சுமைதாங்கி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள பகுதியில் நான்கு மீட்ட ருக்குள் மதுபானக்கடை சட்டத்திற்கு புறம்பாக அமைக் கப்பட்டுள்ளது. இந்த கடையானது மேட்டூர் தாலுகா,  மேச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்த கடையாகும்.  இந்த கடை அமைந்த பின்னரே விபத்துகள் பல ஏற்பட்டு மரணங்கள் நடந்துள்ளன. எனவே, இந்த மதுபானக் டையை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்தில் துணைத்தலைவர் ராஜேந்திரன், செயலாளர் அருளாளன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பங் கேற்றனர்

தரைப்பாலத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

தருமபுரி, ஆக.20- பாலக்கோடு அருகே தரைப்பாலத்தில் வீசப்பட்ட பிறந்து ஒரு மணி நேரமே ஆன பச்சி ளம் பெண் குழந்தை மீட்கப்பட்டு, சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, கொம்மநாயக்கனஅள்ளி தேசிய நெடுங் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் பச்சிளம் குழந்தை அழுகுரல் கேட்டுள்ளது. அவ்வழி யாக சென்றவர்கள் குழந்தையின் அழுகு ரலை கேட்டு, அருகே சென்று பார்த்த போது  பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந் தையை சாக்கு பையில் சுருட்டி வைத்து சென் றது தெரியவந்தது. இதையடுத்து மீட்ட  பொதுமக்கள் பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த  தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சாந்தி, பாலக் கோடு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தையை பார்வையிட்டார். சமீப காலமாக தருமபுரி மாவட்டத்தில் கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய் யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிறந்து சில மணி நேரத்தி லேயே பச்சிளம் பெண் குழந்தையை சாலை யில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

அக்.19 முதல் செப்.6 வரை தொழில் கடன் முகாம்

திருப்பூர், ஆக.20- குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் செப்டம் பர் 6 தேதி வரை நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் குறு சிறு மற்றும் நடுத்தர  தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவ தற்கும், ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் தொழிற்சா லையை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத் துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடன் உதவி  வழங்கி வருகிறது. அதன்படி தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழ கத்தின் திருப்பூர் கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும்  நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம்  ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 தேதி வரை நடைபெற  உள்ளது. இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் தமிழ்நாடு  தொழில் முதலீட்டு கழகத்தின் பல்வேறு திட்டங்களில் சிறப்பு  அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், முதல்  தலைமுறை தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன  மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கங் கள் தரப்படுகிறது. தகுதி பெரும் தொழில்களுக்கு தமிழக  அரசின் 25 சதவீதம் முதலீட்டுமானியமாக ரூபாய் 150 லட்சம்  வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே இயங்கி  வரும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு விரிவாக்கம் செய்ய நவீன இயந்திரங்கள் நிறுவும்  பட்சத்தில் கூடுதலாக 5% வட்டி மானியமும் வழங்கப்படுகி றது. இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண் ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை  அளிக்கப்படும். இந்த வாய்ப்பை புதிய தொழில் முனை வோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

குடியிருப்பில் வெள்ள தடுப்புச் சுவரை அகற்ற எதிர்ப்பு

அவிநாசி, ஆக.20 - அவிநாசி அருகே சாய் கார்டன் குடியி ருப்புப் பகுதியில் பாதுகாப்பிற்காக அமைக் கப்பட்டுள்ள தடுப்புச் சுவரை அகற்றக் கூடாது  என அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மனு அளித்த னர். இது குறித்து அப்பகுதி மக்கள் வட்டாட்சி யர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: செம்பியநல்லூர் ஊராட்சி, எஸ்.மேட்டுப்பாளையம் ஸ்ரீ சாய் கார்டனில்  குடியிருப்புக்குத் தேவையான குடிநீர், தார் சாலை, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப் படை வசதியின்றி வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்புக்கு வரும் 40 அடி தென் வடல் சாலையை மேட்டுப்பாளையம் சாலையுடன் இணைத்தால் சுற்றுவட்டாரப் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என இரு ஆண்டுகளாக கோரிக்கை  விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் எங்கள் குடியிருப்பின் கிழக்கு,  மேற்கு என இருபுறமும் 6 அடி உயரமாக வும், எங்கள் வீட்டுமனை பள்ளமாகவும் உள்ளதால், மழைக்காலங்களில் இருபுறமி ருந்து மழை வெள்ளம் உள்ளே புகும் நிலை  உள்ளது. ஆகவே மனையின் உரிமையாளர் வெள்ளம் உள்ளே வராமல் தடுக்க வெள்ள தடுப்புச் சுவர் அமைத்துள்ளார். தற்போது மேற்புறம் உள்ள வெள்ள தடுப்பு சுவரை, சிலர் அணுகுசாலையாக பயன்படுத்த இடிக்க வேண்டும் என வற்பு றுத்துகின்றனர். அவ்வாறு இடித்தால், எங்கள் பகுதிக்கு பாதுகாப்பு இல்லாமல் வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்து விடும்.  ஆகவே வெள்ள தடுப்புச் சுவரை அகற்றக்  கூடாது. அதற்கு மாற்றாக மற்றொரு சாலையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும், வெள்ள தடுப்புச் சுவரை இடித் தால், அங்கு குடியிருக்க சாத்தியமில்லை.  ஆகவே எங்களது ஆதார், குடும்ப அட்டை,  வாக்காளர் அட்டை உள்ளிட்ட சான்றாவணங் களை தங்களது அலுவலகத்தில் ஒப்படைத்து  விட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ் சம் அடைவதைத் தவிர வேறு வழியில்லை.  எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அரசுப் பேருந்து நிறுத்தம்: மார்க்சிஸ்ட் கட்சி போராட்ட அறிவிப்பு

காங்கயம், ஆக.18- வெள்ளகோவிலில் தினமும் காலை 8.15 மணிக்கு துவங்கி ஒலப்பாளையம், பூசாரி வலசு, பச்சாக்கவுண்டன்வலசு, வீர சோழபுரம், மோளக்குட்டப்பாளையம், வாலி பணங்காடு, லிங்கப்பகவுண்டன் வலசு, செலாம்பாளையம், முள்ளிவாடிப்  பாளையம், பழைய வெள்ளியம்பாளையம், புது வெள்ளியம் பாளையம், நத்தக்காடையூர் வழியாக ஈரோட்டிற்கு  10 மணிக்கு சென்றுடைந்து பின்பு மாலை ஈரோட்டில் 4.20 மணிக்கு எடுத்து நத்தக்காடையூர் வழியாக மாலை 6 மணிக்கு  வெள்ளகோவில் சென்றுடையும் டி.என்.39 என்.0486 என்ற  எண்ணுடைய அரசு பேருந்து கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி யில் இருந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள் ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொது மக்கள் சார்பில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி செவ்வாய்கி ழமை காங்கயம் அரசு பேருந்து பணிமனை முன்பு போராட்டம்  நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

கலைத் திருவிழாவில் ஓவியப் போட்டிகளின்  பிரிவுகள் குறைப்பு: மாணவர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம்

திருப்பூர், ஆக.20- பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்ப டும்  கலைத்திருவிழாவில், ஓவியப் போட்டி களின் பிரிவுகள் குறைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.   தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்ற  சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஒ.சுந்தர மூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை இணை இயக் குனருக்கு திங்களன்று  அனுப்பிய கடிதத்தில்  கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசின் பள் ளிக்கல்வித் துறை சார்பில், நடத்தப்படும் கலைத்திருவிழா 2024ஆம் ஆண்டுக்கான போட்டிகள் வரும் 22ஆம் தேதி முதல் நடை பெறுகின்றன. அதற்காக இணையத்தில் மாணவர்களின் விவரப்பதிவுகள் துவங்கி உள்ளன. அனைத்து மாணவர்களும் கலைத் திருவிழாவில் ஏதேனும் ஒரு போட்டியிலா வது பங்கேற்க ஆசிரியர்கள் ஊக்கப்படுத்திட  வேண்டும் என அரசு  அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு  உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர் கள் கலைத் திருவிழாவில் தங்கள் திறன் களை வெளிப்படுத்த ஆவலுடன் காத்திருக் கின்றனர். இந்நிலையில் ஓவியப் போட்டிகள்  கடந்த ஆண்டு வரை 11 வகையான பிரிவுக ளில் நடத்தப்பட்டன. மாணவர்களும் 11 போட் டிகளிலும் பங்கேற்று 33 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் நடப்பாண் டில் ஓவியப் போட்டிகள் குறைக்கப்பட்டு 4 பிரி வுகளில் மட்டும் நடத்த பள்ளிக்கல்வித் துறை யால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெற்றியாளர்களின் எண்ணிக்கை 12 ஆக  குறையும். இந்த முடிவால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏமாற் றம் அடைந்துள்ளனர். போட்டிகள் குறைக்கப் பட்டுள்ளதால் ஓவியப் பயிற்சி மேற்கொண்ட  மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள் ளனர். எனவே எந்தவொரு போட்டிகளிலும் வகைப்பாடுகளைக் குறைக்காமல், மேலும் பல பிரிவுகளை உருவாக்கி பல பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்றுப் பரிசுகள் பெறும் நிலையை பள்ளிக்கல்வித் துறையை உரு வாக்கித்தர வேண்டும். போட்டிகள் குறைப்பு  அறிவிப்பால் ஆசிரியர்கள், மாணவர்கள் மனத்தில் ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை போக்க  வேண்டும். இதுவரை நடைமுறையில் இருந்த 11 வகையான ஓவியப் போட்டிகளும்,  இந்த ஆண்டும் நடைபெறும் என்ற அறி விப்பை ஆணையாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறி விக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொட்டபெட்டா காட்சி முனை தற்காலிகமாக மூடல்

உதகை, ஆக.20- உதகை தொட்டபெட்டா காட்சி முனை தற்காலிக மாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ள னர். நீலகிரி மாவட்டம், உதகைக்கு வரும் சுற்றுலாப் பய ணிகள் இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா  பூங்கா, படகுஇல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்ட பெட்டா சிகரம் உள்ளிட்டவற்றை ஆர்வமுடன் கண்டு  ரசித்துச் செல்கின்றனர். கடந்த சில நாட்களாக தொடர் மழைகால் நீலகிரி  மாவட்டத்துக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், திங்களன்று காலை முதலே சாரல்  மழை பெய்து வந்தது. இதைத் தொடர்ந்து, உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால், உதகை நகரின் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையான படகு  இல்லம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே இரும்பு  பாலம் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி யில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலை யில், தொட்டபெட்டா செல்லும் சாலையில் நடைபெற்று  வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக தற்காலிகமாக  உதகை தொட்டபெட்டா காட்சி முனை செவ்வாய்க் கிழமை முதல் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக வனச் சரகர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் பேரணி

உதகை, ஆக. 20- பெண் மருத்துவர் பாலியல் வன்கொலைக்கு கண்ட னம் தெரிவித்து உதகையில், மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் செவ்வாயன்று கண்டனப் பேரணி  மேற்கொண்டனர்.  கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு  முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள் ளது. அதை கண்டிக்கும் விதமாக நீலகிரியில் மருத்து வர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கண்டனப் பேரணி யில் ஈடுபட்டனர். இதில், அரசு மருத்துவர்கள் சங்கத்  தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். செயலாளர்  தினேஷ், பொருளாளர் தன்ராஜ்  ஆகியோர் முன்னிலை  வகித்தனர். உதகை சேட் மருத்துவமனையில் தொடங் கிய இப்பேரணி, கமர்சியல் சாலை மற்றும் நகரின்  முக்கிய வீதிகள் வழியாக சென்று மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் நிறைவடைந்தது.  இதேபோன்று, உதகை மாவட்ட ஆட்சியர் அலு வலக முன்பு நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கு, இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் முரளிதரன், குரு மூர்த்தி, சிவகுமார், சுகாசினி, முகமது ஷமீர் உட்பட பலர் பங்கேற்றனர்.

குடியிருப்போருக்கு நில உரிமை

கோவை, ஆக. 20- புளியகுளம், மசால் லே அவுட் குடி யிருப்போருக்கு நில உரிமை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவி செயற்பொறியாளரிடம்  செவ்வா யன்று மனு அளித்தனர். கோவை மாவட்டம், புளியகுளம் மசால் லே அவுட்டில் வசிக்கும் 123 குடும் பங்கள் பல தலைமுறைகளாக இங்கு  வசித்து வருகின்றனர். தமிழ்நாடு  நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தால்  இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தா லும், பட்டா வழங்கப்படவில்லை என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கோவை கிழக்கு நக ரக்குழு சார்பில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, இப்பகுதி வாய்க்கால் புறம்போக்கு என கூறப்படு வதால் பட்டா வழங்கப்படவில்லை என் றும், சாக்கடை நீர் மட்டுமே இப்பகுதி யில் வரும் நிலை உள்ளதாகவும் குறிப்பி டப்பட்டுள்ளது. மசால் லே அவுட் குடியி ருப்போருக்கு பட்டா வழங்கி,  வகை மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மனு அளிக்கையில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற் குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், மாவட்டக் குழு உறுப்பினர் ஜாகீர், கிழக்கு  நகரக் குழு உறுப்பினர் நாகராஜ் ஆகி யோர் பங்கேற்றனர்.

எல்.பி.பி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம் அமைச்சர் சு.முத்துசாமி நேரில் ஆய்வு

ஈரோடு, ஆக. 20- எல்.பி.பி வாய்க்காலில் தண்ணீர்  கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை  வட்டம், திங்களூர் உள்வட்டம், நல் லாம்பட்டி கிராமம் செந்தாம்பாளை யம் குளம், ஒட்டங்காடு பகுதியில் கரையை ஒட்டியுள்ள எல்.பி.பி வாய்க்காலில் தண்ணீர் கசிவு ஏற்பட் டது. இதனையறிந்த வீட்டுவசதி மற் றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற் கொண்டார். தொடர்ந்து தண்ணீர் கசிவு ஏற்படுவதை விரைந்து சரி செய்யுமாறு அலுவலர்களுக்கு உத் தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, அமைச்சர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு மாவட்டம், எல்பிபி வாய்கா லில் கடந்த 15ஆம் தேதியன்று தண்ணீர்  திறந்து விடப்பட்டது. முறையாக எப் போதும் ஆகஸ்ட் 15 அன்று தண் ணீர் திறந்து விடப்படுவது ஒரு நட வடிக்கையாக உள்ளது. எல்பிபி வாய்க்காலில் உள்ள அனைத்து இடங்களிலும் பராமரிப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இந்த வாய்க்காலை பொறுத்தவரை மிகவும் பழமையானதாகும். இதன்  காரணமாக சிறிது கசிவு ஏற்பட்டுள் ளது. வாய்க்காலில் எப்பொழுதும் சிறிது தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். இதில், முழுமையாக தண்ணீர் இல்லாமல் இருந்தால் தான் பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ள இயலும்.  எனவே, இந்த வாய்க்காலில் அடுத்த ஆண்டு பராமரிப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாய்க்காலில் ஏற்பட்டுள்ள தண்ணீர் கசிவு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் விவ சாயிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தண்ணீர்  கசிவினை தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ள ஆலோ சனை செய்யப்பட்டுள்ளது. வாய்கா லில் ஏற்பட்டுள்ள தண்ணீர் கசிவு கார ணத்தினை முழுமையாக ஆய்வு  செய்து, இன்னும் இருதினங்களுக் குள் கசிவினை சரிசெய்து தண்ணீர் விட நடவடிக்கை மேற்கொள்ளப்ப டும். இந்த போகத்திற்கான தண்ணீ ரினை திறந்து விடுவதில் எவ்வித தடையும் இருக்க கூடாது. எனவே  அடுத்த போகத்திற்கான தண்ணீர் திறந்து விடும் பொழுது, முறையாக  திட்டமிட்டு, அதற்கான நிரந்தர தீர்வு  காண ஆலோசனை மேற்கொள்ளப்ப டும் என்றார்.  இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராம கிருஷ்ணசாமி, நீர்வளத்துறை தலை மைப்பொறியாளர் முருகேசன் (கோவை மண்டலம்), கண்காணிப்பு  பொறியாளர் கோபி (நீர்வளத்துறை, ஈரோடு), செயற்பொறியாளர் திரு மூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள், விவசாயிகள் ஆகியோர் உடனிருந்த னர்.

லுங்கியில், அதிகாரிகளை சந்திக்க கூடாதாம்

சேலம், ஆக.20- இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க சேலம் அரசு போக்குவரத்து தலைமை அலுவலகத்திற்கு ‘லுங்கி’ அணிந்து சென்ற மாற்றுத்திறனாளிக்கு அனுமதி மறுக் கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, தெற்குகாடு, கொட்டவாடி பகுதியைச் சேர்ந்தவர் லட்சாதி பதி (65). மாற்றுத்திறனாளியான இவர், கடந்த காலங்க ளில் மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து அட்டையை பயன்படுத்தி வந்தார். தற்போது அதனை புதுப்பிக்க சேலம் போக்குவரத்து தலைமை அலுவலகத்திற்கு வந்து, விவ ரத்தை அங்கிருந்த வாயிற் காவலர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது, “நீ லுங்கி அணிந்திருக்கிறாய். அதனால் அதிகா ரியை சந்திக்க முடியாது” என அதட்டும் நோக்கில் காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத முதிய வர் வழியில் சென்றவர்களிடம் இரு சம்மந்தமாக தெரிவித்துள் ளார். இப்பிரச்சனை குறித்து போக்குவரத்து தலைமை அலுவலகத்திற்கு சென்று விசாரிக்கையில், அதிகாரிகளை சந்திக்க லுங்கி அணிந்து வரக்கூடாது. அப்படி வந்தால் உள்ளே அனுமதிக்க முடியாது என நியாயம் கேட்டு சென் றவர்களிடமும் காவலர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெறும் குறை தீர் கூட்டத்தில் எண்ணற்ற பொதுமக்கள். தங்கள் கோரிக்கை மனுவை அவர் அவர்களுக்கு பிடித்த ஆடைகளில் வந்து தான் தருகிறார்கள். மாவட்ட ஆட்சியரும் மனுக்களை பெறுகி றார். ஆனால், போக்குவரத்து அலுவலகத்தில் ஏன் மறுக்கிறீர் கள்? என நீண்ட விவாதத்திற்குப் பின்பு பெரியவரை உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வயதான பெரியவர், அதுவும் மாற்றுத்திறனாளி. தள்ளாத வயதில் இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க வந்தவரிடம் அங்கிருந்த காவலர்கள் கூறியது சரியானதா? அரசு அலுவலகங்களில் ஏழ்மையான மக்கள், தூய்மையான ஆடை அணிந்தால் தான் அதிகாரிகளை சந்திக்க நேரிடுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்வு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை, ஆகஸ்ட். 20- திருமூர்த்தி அணையின் நீர் மட்டம் வேகமாக உயந்துள்ளதால், ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. திருமூர்த்தி அணையின் நீர்பி டிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக  மழை பெய்வாதலும், காண்டூர் கால்வாய் மூலம் தண் ணீர் வரத்தால் அணையின் நீர்மட் டம் வேகமாக உயர்கிறது. இதனால் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கை யாக இருக்குமாறு பொது பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளார்கள்.  திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் பரம்பிக்குளம் ஆழி யாறு திட்ட ( பிஏபி) தொகுப்பு அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணைக்கு பாலாறு மற்றும் பிஎபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் தண் ணீர் கொண்டு வரப்பட்டு திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுவதுடன், உடு மலை நகராட்சி மற்றும் உடுமலை ஒன்றியம்,  குடிமங்கலம் ஒன்றியம் மற்றும்  மடத்துக்குளம் தாலூக்கா பகுதியிலுள்ள கிராமங்களுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கும் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து செவ்வாய்க்கி ழமை காலை நிலவரப்படி, மொத்த முள்ள 60 அடியில்58.14 அடியாக உயர்ந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,136 கன அடியாக உள்ளது. அணையிலி ருந்து பிஏபி 2 ஆம் மண்டலத்திற்கு பிரதான கால்வாய், உடுமலை கால்வாய் மற்றும் குடிநீர் என வினாடிக்கு 830 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்திமலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அணை நிரம்பும் நிலை யில் உபரி நீர் பாலாற்றில் திறக்கப் படும். இதனால் பாலாற்றின் வழி யோர கிராமங்களுக்கும், கேரளா மாநிலம் சித்தூர், ஒலவங்கோடு உள்ளிட்ட வழியோர மக்களுக்கும் பொதுப்பணித்துறை சார்பில் பாது காப்பாக இருக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது.  திருமூர்த்தி அணை கடந்த 1997  ஆம் ஆண்டு நவம்பர் 5 ம் தேதி நிரம்பியது. அதன் பிறகு 24 ஆண்டு களுக்கு பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி உபரிநீர் பாலாற்றில் திறக்கப் பட்டது.

கடந்த மாதம் பருவ மழை தொடங்கிய முதல் வாரத்தில் பிஏபி  தொகுப்பு அணைகள் அனைத்தும் நிரப்பியது. பிஏபி தொகுப்பு அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் எடுக்க முடி யாமல் காண்டூர் கால்வாய் வேலையை காரணம் காட்டி ஒருமாதம் தண்ணீர் எடுக்க முடியாமல் போனது. பின்னர் காண்டூர் கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் வந்தவுடன் கிராமங்களில் இருக்கும்  அனைத்து குளம் மற்றும் குட்டைகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்  என விவசாயிகளின் கோரிக்கையை திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல்  போனது தான் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை. அணையில் இருந்து  பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என சொல்பவர்கள், அணையின் நீரை முறை யாக பகிர்த்து தர வேண்டும் என்பதே சரியாக இருந்திருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

காய்கறி பயிர்களை பாதுகாக்க அறிவுறுத்தல்
காய்கறி பயிர்களை பாதுகாக்க அறிவுறுத்தல் உதகை, ஆக.20- காய்கறி பயிர்களை பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்க  காய்கறி விதைகளின் ஈரப்பதம் 6 முதல் 9  சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்று விதை பரிசோ தனை நிலையம் அறிவுறுத்தி உள்ளது.  நீலகிரி மாவட்டம் உதகை விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் நவீன் கூறியதாவது, விதைகள் அதன் விதைப்பு பருவம் வரும் வரை விதை விநியோகஸ்தர்கள் மற் றும் விவசாயிகளால் தங்களது இடங்களில் சேமித்து வைக்கப் படுகின்றன. இவ்வாறு சேமித்து வைக்கப்படும் விதைகளில் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக இருக்கக்கூடாது. உதரணமாக கேரட் விதைக்கு 8 சதவீதம், பீட்ரூட் 9 சதவீதம், முட்டைகோஸ் மற்றும் காலிபிளவர் விதைக ளுக்கு 7 சதவீதம், முள்ளங்கி விதைக்கு 6 சதவீதம், பீன்ஸ் மற்றும் பட்டாணி விதைக்கு 9 சதவீதம் என்ற அளவு களுக்கு மேல் இருந்தால் எளிதில் பூச்சி நோய் தாக்குதலுக்கு உட்பட்டு, விதைகளின் முளைப்பு திறனும்  பாதிக்கப்படும். தரமான விதைகளை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அதே அளவிற்கு விதைகளை பூச்சி மற்றும் நோய்களிலிருந்து பாதுகாப்பதிலும் அதிக கவ னம் செலுத்த வேண்டும். விதைகளை சேமிக்க புதிய கோணிப் பைகள் அல்லது சுத்தமான தீவன சாக்குகளை பயன்படுத்த வேண்டும். மேலும், விதை சேமிக்கும் குதிர்கள் மற்றும்  கிடங்குகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குப்பைகள்,  துாசிகள், பூச்சி தாக்கப்பட்ட விதைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். விதை மூட்டைகளை சீரான காற் றோட்டத்துடன், தரையில் அடுக்காமல்,  கட்டைகளின் மேல் அடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ்க்கு தானியங்கி சிக்னல்: மாணவருக்கு பாராட்டு

கோபி, ஆக.20- ஈரோட்டில் போக்குவரத்து சிக்ன லில் ஆம்புலன்ஸ்க்கு தானாக வழி விடும் தானியங்கி சிக்னல் சாதனத்தை கண்டுபிடித்த கல்லூரி மாணவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம், கோபி விஐபி  ஆசிரியர் நகரை சேர்ந்தவர் மணிவண் ணன். இவரது மகன் கவின் நடராஜ். இவர் கோவையில் உள்ள தனியார் கல் லூரியில் முதுநிலை பொறியியல் படித்து வருகிறார். கவின் பொறியியல் படிக்கும் போதே அவசர கால சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் போது தடையின்றி செல்ல புதிய தானியங்கி சிக்னல் சாதனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். இதன் தொடர்ச்சியாக, ஜிஎஸ்எம் க்ளோபல் சிஸ்டம் பார் அப்ளிகேஷன் மூலம் அட் வான்ஸ் ஆம்புலன்ஸ் ஆலார்ட் என்ற சாதனத்தை கண்டு பிடித்துள்ளார். இதில் கவின் நடராஜ் கண்டுபிடித் துள்ள டிவைசிலும், ஆம்புலன்ஸில் ஒரு சிப்பை பொருத்தி விட்டால். தொலை வில் ஆம்புலன்ஸ் வரும் பாதையில் சிக்னல் அலார்ட் ஆகி பச்சை விளக்கு எரியும்படியும். மற்ற திசை சாலைகளில் சிகப்பு விளக்கு எரியும் படி செய்து ஆம் புலன்சிற்கு போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் செல்லும் வகையில் கண்டு பிடித்துள்ளார். இதனால் அவசர கால  சிகிச்சைக்கு செல்வோர் உயிரிழப்பை தடுக்க முடியும்.  இதை  ஈரோடு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஜவகர் முன்னிலையில் சோதனை ஓட்டம் செய்து காட்டி விளக்கி னார். கவின்நடராஜ் கண்டுபடித்துள்ள தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் சிஸ் டத்தை நேரில் சோதனை ஓட்டம் செய்து  காட்டிய கவின் நடராஜை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பாராட்டினார். ஆம்புலன்ஸ் தானியங்கி  சிக்னல் சோதனை ஓட்டத்தின் போது  கோபி டிஎஸ்பி தங்கவேல், ஆய்வாளர்  காமராஜ் மற்றும் காவலர்கள் உடனி ருந்தனர்.

சமுதாயக் கூடம் கேட்டு மனு 

ஈரோடு, ஆக.20- பெருந்துறை, திருவேங்கடம்பாளையம் கிராமத்தில் சமுதாயக் கூடம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே திருவேங்கடம் பாளையம், ராஜாஜி வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் திங்க ளன்று ஆட்சியர் நடைபெற்ற குறை தீர் கூட்டத்தில், சமுதாயக் கூடம் கேட்டு மனு அளித்தனர். அம்மனுவில், திருவேங்கடம் பாளையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த குடும்பத்தினர் 70 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகிறோம். சாதாரண கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி  வரும் எங்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு வெளியில் திருமண மண்டபங்களுக்குச் சென்றால் பல ஆயிரங்கள் வாடகை கேட்கின்றனர். அவ்வளவு தொகை செலவு செய்ய இயலாத நிலையில் இருக்கும் எங்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் சமுதாயக் கூடம் கட்டித்தர வேண்டும், என்றனர்.