districts

img

நூல் விலையை கட்டுப்படுத்திடுக

அவிநாசி, ஜன.1- விசைத்தறி தொழில் பாது காப்பு, தொழிலாளர் வாழ்வுரிமை  கோரிக்கை சிறப்பு மாநாட்டில்,  நூல் விலையை கட்டுப்படுத்து மாறு தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி யில் திருப்பூர் மாவட்ட விசைத்தறி  தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில், விசைத்தறி தொழில் பாது காப்பு, தொழிலாளர் வாழ்வுரிமை கோரிக்கை, சங்க பொன்விழா ஆண்டு சிறப்பு மாநாடு தனி யார் திருமண மண்டபத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. இம்மாநாட்டை விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின், மாநிலத் தலைவர் பி.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, சங்க கொடியினை விசைத்தறி தொழிலாளர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் கே. வேலுச் சாமி ஏற்றி வைத்தார்.  அவிநாசி பொதுத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி வர வேற்புரை ஆற்றினார்.

இதில் விசைத்தறி தொழிலாளர் சங்கத் தின் முன்னாள் மாவட்ட செய லாளர் கே.காமராஜ், விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் பொதுச் செயலாளர் எம்.சந்திரன், சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார், சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ், சிஐடியு கட்டிட  கட்டுமான தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஏ.ராஜன் உள்ளிட்டோர் சிறப்புரை யாற்றினர். இதைத்தொடர்ந்து ஆர்.பழனிச்சாமி, பி.சாமியப்பன், ஏ.கே. குமரவேல், வி. மோகனசுந்தரம், எஸ்.துரைசாமி, என்.குப்புசாமி,  கே.முருகன் உள்ளிட்டவர்கள் தீர்மானங்களை முன்மொழிந்தனர். விசைத்தறியாளர்கள் வாங்கிய  கடனை  ஒன்றிய அரசு ரத்து செய்ய  வேண்டும். விசைத்தறிக்கு தனி ரகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். விசைத்தறியாளர்களுக்கு ஜவுளி சந்தை ஏற்படுத்த வேண்டும். நூல்  விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நலிந்து வரும் விசைத் தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். விசைத்தறி தொழிலா ளர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு  குறைந்தபட் கூலி மாதம் 26 ஆயிரம்  வழங்க வேண்டும். ஓய்வூதியம் 10 ஆயிரம் வழங்க வேண்டும்.  தமிழக அரசு மின் கட்டணம்  உயர்வை திரும்பப் பெற வேண் டும். விசைத்தறி தொழிலாளர்  பாதுகாக்க நிறுத்தி வைக் கப்பட்ட இன்சூரன்ஸ் திட்டத்தை  ஒன்றிய அரசு மீண்டும் செயல் படுத்த வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடு,  பசுமை வீடு, அடுக்குமாடி குடியி ருப்பு கட்டித்தர நடவடிக்கை எடுக்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.