districts

img

கள்ளக்குறிச்சியோடு இணைக்க எதிர்ப்பு: 4 கிராம மக்கள் முற்றுகை

விழுப்புரம், நவ.15- கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம்  மாவட்டத்தை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் என இரண்டு மாவட்டங்களாக பிரித்தது தமி ழக அரசு, இதில் விழுப்புரம் அருகே உள்ள  பல கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்க இருந்த நிலையில் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத னால் திருவெண்ணெய்நல்லூர் புதிய தாலு காவாக உருவாக்கி விழுப்புரம் மாவட்டத்து டன் இணைந்தனர். இதனை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி  கொண்டாடினர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பெரியசெவலை, சரவணபாக்கம், ஆமூர், கொளத்தூர் உள்ளிட்ட நான்கு கிராமங்கள் அருகே உள்ள விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்காமல், சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்து டன் இணைக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், மீண்டும் அருகே 18 கிலோ மீட்டரில் உள்ள விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வலி யுறுத்தி முன்னாள் திமுக மாவட்ட கவுன்சிலர்  துரைராஜ் தலைமையில் விழுப்புரம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் வந்தனர். திடீரென கோஷங்கள் எழுப்பியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடு பட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி சங்கர் தலைமையிலான காவலர்கள் சமா தான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர்  அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.