districts

img

கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

கோவை, மே 27- ஆனைமலையடுத்த கோட்டூரில், குட்டி  ஈனும் நிலையில் உள்ள மாடு கிணற்றில் தவறி விழுந்தது. 3 மணி நேரம் போராட்டத் திற்கு பிறகு ராட்சத கிரேன் மூலம் மீட்கப் பட்டது.  ஆனைமலையை அடுத்த கோட்டூர் பகுதி யில் சண்முகசுந்தரம் என்பவர் தோட்டத்தில்  மாடுகளை வளர்த்து வருகிறார். இந் நிலையில், குட்டி ஈனும் நிலையில் உள்ள  ஒரு மாடு தவறுதலாக தோட்டத்து உரிமை யாளரின் கிணற்றில் விழுந்துள்ளது. இது குறித்து அறிந்த அங்கு உள்ளவர்கள் தீய ணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத் தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மாட்டை  மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மாடு குட்டி ஈனும் நிலையில் இருந்ததால் மாட்டை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்பு ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாடு பத்திரமாக மீட்கப்பட்டது. மாட்டை மீட்ட தீ யணைப்பு துறையினர் தரைமட்டமாக உள்ள  கிணற்றை சுற்றி வேலி அமைத்து கால்நடை கள் செல்லாதவாறு பாதுகாத்திட வேண்டும் என தோட்டத்து உரிமையாளரிடம் வலியு றுத்தியுள்ளனர். மாட்டை உயிருடன் காப் பாற்றிய தீயணைப்பு துறையினருக்கு அப் பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.