உடுமலை, மார்ச் 12- உடுமலை மற்றும் மடத்துக்குளம் கிராமங்களில் உள்ள குளங்களுக்கு திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளில் இருந்து தண்ணீர் திறத்து விட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளார்கள். உடுமலை, மடத்துக்குளம் தாலூகா பகுதிகள் அதிமான கிராமங்கள் கொண்டதாக உள்ளதாலும், அனைவரின் முக் கிய தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு விவசா யிகள் மற்றும் பொது மக்களின் வாழ்வாதரமாக உள்ளது. மேலும் வரும் மாதங்களில் வெயில் தாக்கம் அதிமாக இருக் கும் என்ற அறிவிப்பால் தண்ணீரின் தேவை அதிமாக இருக் கும் என்பதால் தண்ணீரின் தேவை அதிமாக இருக்கும் என்ற காரணத்தால் கிராமங்களில் உள்ள அனைத்து குளம் மற் றும் குட்டைகளுக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். குளம் மற்றும் குட்டைகளுக்கு தண்ணீர் இருந்தால் சுற்று வட்டார பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் இதனால் ஆழ்குழாய்கள் மூலம் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும் கால்நடைகளுக்கு தண்ணீர் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் எனவே அணைகளில் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துவுள்ளனர்.