districts

img

குருமலையில் வன உரிமை சட்டப்படி சாலை அமைத்துத் தர அமைச்சரிடம் கோரிக்கை

திருப்பூர், மே 12- திருப்பூர் மாவட்டம் தளி பேரூராட் சிக்கு உட்பட்ட 16 ஆவது வார்டு குரும லையில் வன உரிமைச் சட்டப்படி சாலை அமைத்துத் தரும்படி மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் தளி பேரூராட்சி துணைத்தலைவரும், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத் திருப்பூர் மாவட்டச் செயலாளருமான செல்வன் கோரிக்கை விடுத்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜை புதனன்று செல்வன்  நேரில் சந்தித்து மனு அளித்தார். இதில். ஜல்லிப்பட்டி ஊராட்சி ஈசல் திட்டு வன  குடியிருப்புக்கு கொங்கு ராயர் குட்டை யிலிருந்து சாலை அமைக்க வலியுறுத் தப்பட்டிருந்தது. அதேபோல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதி யில் உள்ள கடம்பன் கோம்பை வன குடியிருப்புக்கு சாலை அமைப்பதற் கும், கோவை மாவட்டம் போளுவாம் பட்டி வனப்பகுதியில் வசிக்கக்கூடிய பழங்குடியின மக்கள் சேகரிக்கும் சிறு வன மகசூல் பொருட்களை வனத்து றையினர் ஏலம் விடுவதை தடை செய் யக் கோரியும் மனு வழங்கப்பட்டது. திருமூர்த்தி மலை அமணலிங் கேஸ்வரர் கோவிலில் இருந்து கிடைக் கும் வருவாயில் ஒவ்வொரு வருடமும் 10 சதவீதம் திருமூர்த்தி மலை கிராம சபைக்கு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. அதன் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இக்கோரிக்கைகள் மீது உடனடி யாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.இச்சந்திப்பில் தளி பேரூராட்சி துணைத் தலைவர் கோ.செல்வனுடன் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் கோவை  மாவட்ட செயலாளர் வி.சந்திரசேக ரன், மாநிலக்குழு உறுப்பினர் திரு மூர்த்திமலை என்.மணிகண்டன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருப் பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் என். முருகன், கோ.செந்தில்குமார் ஆகி யோர் உடனிருந்தனர்.