திருமணம் செய்வதாக கூறி வாலிபரை ஏமாற்றிய இளம்பெண்
கோவை, டிச.30- விளாங்குறிச்சி அருகே திருமணம் செய்து கொள்வ தாகக் கூறி காதலனிடம் ரூ. 66 லட்சம் வரை ஏமாற்றிய இளம் பெண் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள் ளனர். கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வர் சபரி(33). சென்னையில் உள்ள ஒரு தனியார்ந் நிறுவ னத்தில் பணி புரிந்து வருகிறார். இவரும், கோவை சுல்தான் பேட்டை அடுத்த ஓடக்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணும், கடந்த 5 வருடங்களாக காதலித்து வந் தனர். இந்நிலையில், அப்பெண் தனது தந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி, காதலன் சபரியிடம் பணம் கேட்டுள்ளார். சபரியும் தான் திரு மணம் செய்து கொள்ள போகும் பெண் தானே என எண்ணி, கையில் இருந்த பணத்தையும், லோன் வாங்கியும் சுமார் ரூ.66 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை, அப்பெண்ணுக்கு வழங் கியுள்ளார். இந்தநிலையில், அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த சபரி, அப்பெண்ணின் பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கும் படி கேட்டுள்ளார். பணத்தை தர மறுத்து அப்பெண் மற்றும் பெற்றோர், சபரியை தகாத வார்த்தையால் பேசி திட்டிய தாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரூ.14 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்த அப்பெண், மற்ற பணத்தை தராமல் ஏமாற்றி யுள்ளார். இதனால், மனமுடைந்த சபரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். புகாரின் பெயரில் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி, ஏமாற்றிய பெண் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
கோபி, டிச.30- கோபி அருகே மாரியம்மன் கோவிலின் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிங்கிரிபாளை யத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வந்து செல்கின்ற னர். இந்நிலையில், கோவிலின் பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு, வெள்ளியன்று காலை மீண்டும் திறக்க வந்துள்ளார். அப்போது, கோவிலின் கதவு உடைக்கப் பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், உண்டிய லில் இருந்து பணம் திருடு போனதும் தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார், தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர்.இதனிடையே, வரப்பாளையம் பகுதியில் காவல்து றையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவரை பிடித்து விசாரித்தனர். இதில், மூவரும் கோவிலில் திருடிய கும்பல் என தெரிய வந்தது. மேலும், அவர்களிடம் 2500 ரூபாய் சில்லரை காசு கள் இருந்துள்ளன. இதனைத்தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
கேபிள் வயர்களை துண்டிக்க போவதாக எச்சரிக்கை
திருப்பூர், டிச.30- திருப்பூர் மாநகரப் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனி யார் கேபிள், தொலைத்தொடர்பு கம்பி வடங்களை ஒரு வார காலத்திற்குள் சீரமைக்காவிட்டால் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆணை யாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது, மாநகரின் பல்வேறு சாலை களின் மையத் தடுப்புகள் மற்றும் தெருவிளக்கு கம்பங்களில் உள்ள (கேபிள் வயர்) கம்பி வடங்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே இப்பணிகளை வரன்முறைப்படுத்த அரசு கேபிள், தனியார் கேபிள் நிறுவனங்கள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் மாநகராட்சி அலு வலகத்தில் பல்வேறு தேதிகளில் மூன்று கலந்தாலோ சனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, உரிய பாதுகாப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மேற்படி அனைத்து நிறுவனங்கள் தங்களது இழை வடங்களை கள ஆய்வு செய்து சீர்படுத்திடவும், ஒரு வார காலத்திற்குள் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் இழை வடங்கள் துண் டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
தாராபுரம், டிச.30- தாராபுரம் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்விதுறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மா வட்ட மக்களுக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பங்களிப்பாக ரூ.3 லட்சத்து 25 ஆயி ரத்து 800 மதிப்பிலான நிவாரண பொருட்கள் பெறப்பட்டது. இந்த நிவாரணப்பொருட்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ந.கீதா அவர்கள் மூலமாக மாவட்ட ஆட்சியரி டம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜூனியர் ரெட்கி ராஸ் மாவட்ட அமைப்பாளர் மனோகரன், ஆலோசகர்கள் நா.பால்ராஜ், சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் ஆறுமு கம், ரமேஷ்கண்ணன், பொன்னுசாமி, ராஜகோபால், கணேஷ் குமார், அரவிந்தன், முரளிதாஸ், ஜெயபாஸ்கரன், ஞா.மனு வேல், நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.15 லட்சம் ஆன்லைன் மோசடி
உதகை, டிச.30- உதகையில் இரட்டிப்பு பணம் தரு வதாக கூறி ஐடி நிறுவன ஊழியர் களை ஆன்லைன் மூலம் மோசடி செய்த கும்பலை உதகை சைபர் கிரைம் போலீ சார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த 31 வயது நபரும், குன்னூர் ஆழ் வார்பேட்டையைச் சேர்ந்த 41 வயது நபரும், தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலை யில், ஆன்லைன் மூலம் வேறு ஏதாவது பணி உள்ளதா? என இருவரும் தேடி வந்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட மோசடி கும்பல் இவர்களுக்கு பகுதி நேர ஆன்லைன் வேலை இருப்பதாக, இருவருக்கும் தனித்தனியாக வாட்ஸ்- அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினர். இதை பார்த்த 2 பேரும் தங்களுக்கு பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் வேலை செய்ய தயார் என்று பதில் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுடைய எண்ணுக்கு டெலிகிராம் மூலம் லிங்க் அனுப்பி, ஆன்லைன் மூலம் வரும் ஊதியத்தை விட இதில் நீங்கள் பணம் முதலீடு செய் தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய இருவரும் தவணை முறையில் கூகுள்பே மூலம் 15 லட்ச ரூபாயை அனுப்பி உள்ளனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு இரட்டிப் பாகி கொஞ்சம் தொகை வந்தது. அதன் பின்னர் எந்தவித பணமும் வரவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இருவரும்ம் தனித்தனியாக உதகை சைபர் கிரைம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், வழக்கு பதிந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை
நாமக்கல், டிச.30- நாமக்கல்லில், ஆயுதப்படையில் பணியாற்றி வந்த பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (33). இவர் நாமக்கல் ஆயுதப்படை பிரிவில் பெண் காவல ராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி முதல் கண வருடன் விவாகரத்து ஏற்பட்ட நிலையில், ஈரோட்டில் பணியாற் றிய போது உடன் காவலராக பணியாற்றிய சேகர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்க ளுக்கு இரண்டரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந் நிலையில், சேகர் தற்போது நீலகிரி மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வருகிறார். பெண் காவலர் வைஷ்ணவி கடந்த 22 ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆயுதப்படைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். அவர் நாமக்கல் கோட்டைமேடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தனியே வசித்து வந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தினை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்த அக்கம்பக்கத் தினர் வைஷ்ணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலை யில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீசார், குடும்பப் பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
யானை தாக்கி தொழிலாளி படுகாயம்
தருமபுரி, டிச.30- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கடமடை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயியான இவ ருக்கு கடமடை வனப்பகுதியை ஒட்டி சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் (50) வேலை செய்து வருகிறார். இந்நி லையில், சனிக்கிழமையன்று கடமடை வனப்பகுதிக்கு மாடு களை மேய்க முருகன் பிடித்துச் சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்த வெளியேறிய காட்டுயானை ஒன்று, மாடு மேய்துக்கொண்டிருந்த முருகனை தூக்கி வீசி தாக்கி யது. இதில் படுகாயமடைந்த முருகன், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளார்.
சிப்காட் திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஈரோடு, டிச.30- சிப்காட் மற்றும் உயர்மின் கோபுர திட்டங் களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட அளவிலான குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். ஈரோடு மாவட்ட அளவிலான விவசாயி கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு, விவசாயிகளின் கோரிக்கை மனுக் களை பெற்றுக்கொண்டு, ஆலோசனைகளை வழங்கினர். அப்போது விவசாயிகள் பேசுகை யில், கீழ்பவானி இரண்டாம் பருவ பாசனத் துக்கு ஜன.7 ஆம் தேதியன்று தண்ணீர் திறக் கப்பட உள்ளது. எனவே, புதர் மண்டிக்கிடக் கும் கிளை வாய்க்கால்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். கீழ்பவானி பாசனப் பகு தியில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். கவுந் தப்பாடி பகுதியிலுள்ள நீர்நிலைகள் அருகே மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இத்தகையை செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இச் செயல் தொடராமல் கண்காணிக்க வேண் டும். அந்தியூர் பெரிய ஏரி பகுதியில் உபரிநீர் வெளியேறும் கால்வாயில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி, தண்ணீர் குடியிருப்பு களுக்குள் புகுவதைத் தடுக்க வேண்டும். மேலும், சிப்காட் மற்றும் உயர்மின் கோபுர திட்டத்துக்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை உடனடியாக வழங்க வேண்டும், என்றனர். இதையடுத்து ஆட்சியர் ராஜகோபால் சுன் கரா பேசுகையில், வன உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மலைப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு சில முன்னெடுப்புகள் மேற்கொண்டுள்ள நிலை யில், சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதி விட்டு வருகின்றனர். இத்தகைய செயல்கள் வனப்பகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்ப டுத்தும். இதனால் தவறான பிரசாரங்களை தவிர்க்க வேண்டும். சென்னிமலையை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க அரசுக்குப் பரிந்துரை அளிக்கப்படும். அந்தியூர் பெரிய ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோபி கோட் டாட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப் பிக்கப்படும். சிப்காட் திட்டத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும், என்றார்.
அரூருடன் செல்லம்பட்டியை இணைக்க கோரிக்கை
தருமபுரி, டிச.30- அரூர் கால்நடை மருத்துவமனையுடன் செல்லம்பட்டி ஊராட்சியை இணைக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், செம் லம்பட்டி ஊராட்சியில் ஏராளமான கிராமங் கள் உள்ளன. இப்பகுதியில் கால்நடை வளர்ப் போர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைக ளுக்கு கருவூட்டுதல், கோமாரி தடுப்பூசி போடுதல் மற்றும் பல்வேறு சிகிச்சைகளுக் காக தீர்த்தமலையிலுள்ள அரசு கால்நடை கிளை மருந்தகத்திற்கு கால்நடைகளை கொண்டு சென்றனர். இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு செல்லம்பட்டி ஊராட்சி, வடுகப்பட்டியிலுள்ள கால்நடை மருத்துவ மனை கிளை மருந்தகத்துடன் இணைக்கப் பட்டது. இதனால், கால்நடை வளர்போர் அவ திப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ள னர். செல்லம்பட்டியில் இருந்து தீர்த்தம லைக்கு 8 கி.மீ், வடுகப்பட்டிக்கு 12 கி.மீ தூரம் செல்ல வேண்டும். ஆனால், அரூருக்கு, 5 கிலோ மீட்டர் தூரம்தான் உள்ளது. எனவே, அரூர் கால்நடை மருத்துவமனையுடன் செல் லம்பட்டி ஊராட்சியை இணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இரண்டாம் தரமாக தமிழக மக்களை ஒன்றிய அரசு எண்ணுகிறது
சேலம், டிச.30- ஒன்றிய பாஜக அரசு, தமிழக மக் களை இரண்டாம் தர மக்களாக எண்ணு கிறதென தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டி னார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறு வன தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் சனியன்று நடைபெற் றது. இதன்பின் வேல்முருகன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட் டில் உடனடியாக சாதிவாரி கணக்கெ டுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிப்.28 ஆம் தேதி கடலூரில் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வு ரிமைக் கட்சி விரும்பிய இடத்தை அதன் கூட்டணி கட்சியான திமுக வழங்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவா ரண நிதியை ஒன்றிய அரசு வழங்க தயங்குவதாக எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராம னின் பேட்டி மற்றும் பேச்சு ஆணவம் நிறைந்ததாக உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு பேரி டர் நிதி வேண்டுமென ஒன்றிய அரசை கேட்கும் பொழுது, ஏன் நிதி தர மறுக் கிறது? ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களை இரண்டாம் தர மக்களாக எண் ணுகிறது. அப்படி நடத்துகின்ற ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடம் கற்பிக்க வேண்டும். மேலும், சட்டவிரோதமாக செயல்படும் துணை வேந்தர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், என்றார்.
காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற நிவாரணம் வழங்க கோரிக்கை
உடுமலை, டிச.30- உடுமலை பகுதிகளில் காய்ந்து போன தென்னை மரங் களை அகற்ற நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதிகளில் பல ஆயிரக்கணக்காண ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் கணிசமான வருமானத்தை பெற்று வந்த விவசாயிகள், தற்பொழுது பருவமழை இல்லாமல் போனதால், தென்னை மரங்களை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி உற்ற முடியாமல் தென்னை மரங்கள் காய்ந்து போயின. இந்நிலையில், விவசாய நிலங்களில் காய்ந்த மரங்களை முழுமையாக அகற்ற சில ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதால், விவசாய நிலங்களில் அகற்றப்படாத தென்னை மரங்கள் உள்ளன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பருவ மழை பொய்த்து போனதால் காயந்து போன தென்னை மரங் களை அகற்ற சில ஆயிரம் செலவு ஏற்படுகிறது. முன்பு செங்கல் சூலை உரிமையாளர்கள் காய்ந்து போன மரங்களை எடுத்து சென்றார்கள். ஆனால், பல புதிய தொழில் நுட்பங் கள் செங்கல் சூலைக்கு வந்ததால் மரங்களை எடுக்க யாரும் வருவது இல்லை. இதனால் மரங்களை எங்களால் அகற்ற முடியாமல் உள்ள நிலங்களில் விவசாயம் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறோம். எனவே, தமிழ்நாடு அரசு காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்றனர்.