இளம்பிள்ளை, ஏப்.16- இளம்பிள்ளையில் ஆபத்தான முறையில் பேருந்தின் படியில் பள்ளி மாணவ, மாணவிகள் பயணித்து வரும் நிலை யில், கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை கள் எழுந்துள்ளன. சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மாதிரி பள்ளி உள்ளிட்டவைகள் இயங்கி வரும் நிலையில், 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரு கின்றனர். மாலை நேரத்தில் பள்ளியை விட்டுச் செல்லும் பொழுது இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் முன்பு மாணவ, மாணவிகள் தங்கள் ஊருக்கு செல்ல மணிக்கணக்கில் காத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள் ளது. மேலும், மாலையில் பள்ளி விட்டு செல்லும் பொழுது இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி பகுதிக்கு ஒரே ஒரு டவுன் பேருந்து மட்டுமே அந்த நேரத்தில் இயக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறி படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தை உணராமல் பய ணம் செய்து வருகின்றனர். இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், நாங் கள் பள்ளி விட்டு செல்லும் பொழுது எங்கள் ஊருக்கு ஒரே ஒரு பேருந்து மட்டும் செல்வதால் நாங்கள் மிகவும் சிரமப் பட்டு வருகிறோம். ஆகவே, அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்றும், பேருந்து நிலையத்தில் மாணவி களுக்கு காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.