மே.பாளையம், பிப்.20- தண்ணீரை தேடி யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையால் காட்டுக்குள் கட் டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள் பல, போதிய பராமரிப்பின்றி கிடப் பதாக புகார்கள் எழுந்துள்ளன. கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறு முகை, காரமடை வனச்சரக பகுதி களில் காட்டு யானைகளின் நடமாட் டம் அதிகம் காணப்படும். தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் வழித்தடப்பாதை இவ்வனப்பகுதி யில் உள்ளதால், வலசை செல்லும் யானைக்கூட்டங்கள் கடந்து செல் வது வழக்கம். இடம் பெயர்ந்து செல் லும் யானைகள் வனத்தினுள் தங்க ளது தாகம் தீர்க்க தண்ணீர் கிடைத் தால் கடந்து சென்றுவிடும். காட்டுக் குள் தண்ணீர் கிடைக்காத போது அவை காட்டை ஒட்டியுள்ள ஊர்க ளுக்குள் புகுந்து விடும். நீரை தேடி யானைகள் கிராமங்களுக்குள் புகு வதை தடுக்கும் நோக்கில் வனத் தினுள் ஆங்காங்கே சுமார் 32 இடங் களில் தண்ணீர் தொட்டிகள் கட்டப் பட்டுள்ளன. இந்த தொட்டியில் இருக்கும் நீரை அருந்தும் யானை கள் அமைதியாக கடந்து சென்று விடுகின்றன. தற்போது கோடை காலம் துவங் கும் முன்னரே மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் வறட்சி உரு வாகியுள்ளது. வனப்பகுதியில் போதிய அளவு பருவ மழை பெய் யாத காரணத்தினாலும், வெயி லின் தாக்கம் முன்கூட்டியே துவங்கி யதாலும் வனத்தினுள் இயற்கை யான குளம், குட்டைகள் மற்றும் நீரோடைகள் வறண்டு வருகின்றன. இதனால் யானைக் கூட்டங்கள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி களை தேடி வரத்துவங்கியுள்ளன. ஆனால், இவ்வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெரும் பாலான தண்ணீர் தொட்டிகள் போதிய பராமரிப்பின்றி பயனற்று கிடக்கின்றன. பல இடங்களில் உள்ள தொட்டிகளில் நீர் நிரப்ப பயன்படுத்தும் ஆழ்குழாய் மோட் டார்கள் பழுதாகி கிடப்பதால் தண் ணீர் நிரப்பும் பணிகள் நடைபெறுவ தில்லை. சில தொட்டிகளை மாதக் கணக்கில் சுத்தப்படுத்தாமல் இருப் பதால் அதில் உள்ள நீர் கெட்டுப் போய் பச்சை பசேலென பாசிகள் நிரம்பி காணப்படுகின்றன. யானைகள் சுத்தமான நீரை மட் டுமே அருந்தும் இயல்புடையவை என்பதால் இந்நீரை அவை அருந் துவதில்லை. இதனால், தூய்மை யான நீரை தேடி யானைகள் பரிதா பமாக அலைந்து வருவதால் இவை நீருக்காக வனத்தை ஓட்டியுள்ள ஊர்களுக்குள் புகும் அபாயம் அதி கரித்து வருகிறது. எனவே யானை - மனித மோதல்கள் உருவாவதை கட்டுப்படுத்த இவ்விஷயத்தில் வனத்துறையினர் தீவிர கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படை யில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை பரா மரித்து தினசரி அதில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுப்பது அவசியம் என வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.