districts

திருப்பூரில் சொத்து வரி உயர்வுக்கு ஆட்சேபம் எதிர்ப்பை மறைப்பதா? சிபிஎம் கேள்வி

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி திருப்பூர் மாநகராட்சி மாமன்றத்தில் சொத்து வரி உயர்வு தீர்மானம் முன்மொழியப்பட்டபோது மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த நான் கடுமையாக எதிர்த்து, தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடிதம் கொடுத்தேன். ஆனால் கடந்த மே 27ஆம் தேதி எமக்கு கொடுத்த தீர்மான நகலில் சொத்து வரி உயர்வுக்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததை குறிப்பிடவில்லை.  அத்துடன் கடந்த மன்றக் கூட்டத்துக்குப் பின் மே 12ஆம் தேதி எங்கள் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்திலும், நான்கு மண்டல அலுவலகங்களிலும் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனுக் கொடுத்துள்ளோம். எனவே சொத்து வரி உயர்வைத் திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கட்சியின் 53ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரான நான் கூறியதையும், கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியிட்ட கடித விபரத்தையும் தீர்மானத்தில் சேர்க்கும்படி திங்களன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மணிமேகலை மேயரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருப்பூர், மே 31- சொத்து வரி உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆரம்ப நிலையில் எதிர்ப்பு தெரிவித் தது. அதை மறைக்கும் நடவடிக்கை சரி யல்ல என்றும், தீர்மானத்தை திருத்த வேண் டும் என்றும் மாநகராட்சி ஆணையளருக்கு சிபிஎம் கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலா ளர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகு மார் பாடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ர.மணிமே கலை சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரி வித்து ஆட்சேபணையை மாநகர மாமன்ற கூட்டத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், எதிர்ப்பு கடிதமும் அளித்துள்ளார். இதற்கி டையே மே 12 ஆம் தேதியன்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாநகராட்சி மற்றும் நான்கு மண்டல அலுவலகங்களிலும் திர ளான பொதுமக்கள் பங்கேற்போடு, நூற் றுக்கணக்கான ஆட்சேபனை மனுக்கள் அதி காரிகளிடம் அளிக்கப்பட்டது.  இதனை மறைத்து மார்க்சிஸ்ட் கட்சி சொத்து வரி உயர்வு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதை போல் உண்மைக்கு மாறான தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது, இது ஏற்புடையதல்ல. இப்போதும் கடுமையாக சொத்துவரி உயர்வை எதிர்த்து ஆட்சேப ணையை பதிவு செய்கிறோம். எனவே,  தீர்மானத்தை திருத்த வேண்டும். சொத்து  வரி உயர்வு தீர்மானத்தை திரும்பப்பெற  வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.