districts

img

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஏழை மக்களுக்கு நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுகோள்

இளம்பிள்ளை, பிப்.27- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண் டாட வேண்டும் என சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி வேண்டு கோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச் 1 ஆம் தேதி  (நாளை) கொண்டாடப்படுகிறது. இந்நிலை யில், சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நகர, ஒன்றிய, வார்டு, கிளைக் கழகங்கள் தோறும் இனிப்புகள் வழங்கி ஏழை, எளியோ ருக்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவர் களுக்கு கல்வி உபகரணங்கள், மரக்கன்றுகள் நட்டு நிர்வாகிகள் கொண்டாட வேண்டும். மேலும் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் உள் ளிட்ட அரசு பொது மருத்துவமனைகளில் நாளை பிறக்கும் குழந்தைகள் அனைவருக் கும் தங்க மோதிரம் அணி விக்கப்பட உள்ளது. மாணவர் அணி சார்பில் மகுடஞ்சாவடி தாய்மடி அறக்கட்டளை முதி யோர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. விவசாயி அணி சார்பில்  ஜவஹர் ஆரம்பபள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் முதியோர்களுக்கு உடைகள், விவசாய தொழிலாளர் அணி சார் பில் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகே உள்ள நலிந்தோருக்கு பல்வேறு உத விகள், தகவல் தொழில் நுட்ப அணி சார்பில்  சின்னப்பம்பட்டி வள்ளலார் முதியோர் இல் லத்தில் காலை மற்றும் மதிய உணவு வழங்கு தல், மகளிரணி சார்பில் சேலம் கேம்ப் சுட ரொளி ஆதரவற்றோர் முதியோர் மையத் திற்கு உணவு வழங்குதல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.