திருப்பூர், மே 22- தமிழகத்தில் ஊராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மாற் றுத்திறனாளிகள் கடை வைக்க இடம் ஒதுக்கி, அனுமதி வழங்குமாறு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான நலச்சங்கம் கோரியுள் ளது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல் லூரில் ஞாயிறன்று தமிழ்நாடு அனைத் துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றிய 3 ஆவது மாநாடு நடைபெற் றது. இம்மாநாட்டிற்கு ஒன்றியத் தலை வர் பி.ரோஸி தலைமை வகித்தார். எஸ்.பாண்டியன் வரவேற்றார். ஈரோடு மாவட்டச் செயலாளர் ஏ.சகாதேவன் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசி னார். ஒன்றியச் செயலாளர் சி.ராஜ சேகர் அறிக்கை சமர்ப்பித்தார். சங்கத் தின் மாவட்டத் தலைவர் டி.ஜெயபால், மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ், மாவட்டப் பொருளாளர் ஆர்.காளியப் பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில் மாற்றுத்திறனாளி கள் சிறு, குறு தொழில்கள் செய்ய வங் கிக் கடன் வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு வேலை வழங்க வேண் டும். தமிழகத்தில் ஊராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் கடை வைக்க இடம் ஒதுக்கி, அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் வடக்கு ஒன்றியத் தலைவராக எஸ். பாண்டியன், செயலாளராக பி.ரோஸி, பொருளாளராக டி.என்.மோகன், துணை தலைவர்களாக மெய்யழகன், சக்திவேல், துணை செயலாளர்களாக ராஜசேகர், கரோலின் ஆகியோர் உட் பட 16 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக மாநிலச் செயலாளர் டி.வில்சன் நிறைவுரை ஆற்றினார். கே.சுப்பிரமணி நன்றி கூறி னார்.