districts

img

இலவச பட்டா நிலத்தை வகை மாற்றம் செய்துதர கோரிக்கை

திருப்பூர், டிச.6 – இலவச பட்டாவாக வழங்கப்பட்ட இடத்தை நத்தம் புறம் போக்காக வகை மாற்றம் செய்துதரக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு  ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.சிகாமணி தலைமையில் நெருப் பெரிச்சல் கிராமத்தை சேர்ந்த  பொதுமக்கள் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: நெருப்பெரிச்சல் கிராமத்துக்கு உட் பட்ட வாவிபாளையம், நெருப்பெரிச்சல் ஆகிய பகுதிக ளில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 1972-ஆம் ஆண்டு இலவச பட்டா வழங்கப்பட்டது. நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்த  15 பேருக்கு மந்தை புறம்போக்காகவும், வாவிபாளை யத்தை சேர்ந்த 14 பேருக்கு சந்தை புறம்போக்காவும் வரு வாய்த்துறை ஆவணத்தில் உள்ளது.  இதனால் எங்களது பட்டா நிலத்தை, முழுமையாக அனு பவிக்க முடியாத நிலை உள்ளது. வங்கியில் கடன் உதவி,  மின்சாரம், தண்ணீர் மற்றும் அரசின் அடிப்படை பலன்க ளைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல்  வாரிசுதாரர்கள் பட்டா பெறுவதற்கும் இடையூறு ஏற்படுகி றது. ஆகவே மேற்கண்ட பகுதியை சேர்ந்தவர்களுக்கு நத் தம் புறம்போக்காக வகை மாற்றம் செய்துதர வேண்டும். இவ் வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.