districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வாகன நிறுத்துமிடம் அமைக்க கோரிக்கை

சேலம், பிப்.5- ஏற்காடு பேருந்து நிலையம் பகுதியில் இருசக்கர வாக னங்களை நிறுத்தவதற்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளளர். சேலம் மாவட்டம், ஏற்காட்டை சுற்றிலும் 67 மலைக்கிரா மங்கள் உள்ளன. இங்கு போதுமான அளவில் சாலை  வசதிகள் உள்ளதால், மலைக்கிராம மக்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களில் ஏற்காடு மற்றும் சேலத்துக்கு பல்வேறு பணிகளுக்கு செல்வதால் சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை சாலைகள், பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். ஏற்காடு பேருந்து நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கித்தர வேண்டும் என இருசக்கர வாகன ஓட்டிகள், பேருந்துப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழமை வாய்ந்த முனியப்பன் சிலை திருட்டு

நாமக்கல், பிப்.5- மோடமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த முனியப் பன் சிலை திருட்டு பொதுமக்கள் மற்றும் இந்து சமய அற நிலைத்துறையினர் காவல் நிலையத்தில் புகார்யளித்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள  மோடமங்கலம் கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த  முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்த பகுதி யில் உள்ள எட்டு கிராம பொதுமக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருவிழாக்கள் நடத்தப்படாமல், தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 9.ஆம் தேதி யன்று காலை கோவிலை வழக்கம்போல் திறக்க வந்த பூசாரி  பெருமாள், கோவிலில் கதவு திறக்கப்பட்ட நிலையில், பீடத் திலிருந்து சிலை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது வரை நடவடிக்கை எடுக்காததால் திங்களன்று கிராம மக்கள் ஒன்று திரண்டு வெப்படை காவல் நிலையத்தில் உதவி  ஆய்வாளர் பாலமுருகனிடம் புகார் அளித்தனர். அப்பொழுது அவர் புகாரை பெற்றுக் கொண்டு, இது குறித்த புகாரை இந்து  சமய அறநிலையத்துறை அலுவலர் கீதா என்பவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவிடம்  புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

33 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

சேலம், பிப்.5- சேலம் மாவட்டத்தில் 33 வட்டாட்சியர் களை பணியிட மாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள் ளார். மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள  நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தர வுப்படி, நிர்வாக நலன் கருதி, தற்போது சேலம் மாவட்டத்தில் 33 வட்டாட்சியர்களை பணியிட மாறுதல் செய்து ஆட்சியர் ரா. பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். சேலம்  மேற்கு, சேலம் தெற்கு, ஆத்தூர், கெங்க வல்லி, தலைவாசல், ஓமலூர், ஏற்காடு, காடையாம்பட்டி உள்ளிட்ட வட்டாரங்களில் வட்டாட்சியர்கள், தனி வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 33 வட்டாட்சியர்கள் பணியிட மாறு தல் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல சேலம்  மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி துறை, கிராம ஊராட்சிகளில் 15 வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பணியிடம் மாறுதல் செய்யப்பட்டுள் ளனர். 5 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்க ளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இளநிலை உதவியாளர், ஊர் நல அலுவலர், காசாளர், தட்டச்சர் நிலையில் இருந்து உதவி யாளராக 6 பேருக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. அதேபோல உதவியாளர் நிலை  பணியிலிருந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராக 6 பேருக்கு பதவி உயர்வு வழங் கப்பட்டுள்ளது.

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளி தர்ணா!

சேலம், பிப்.5- சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண் டித்து ஆட்டோ தொழிலாளி ஆட்சியர் அலுவ லகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். சேலம் மாநகரம், அழகாபுரம், காட்டூர் பகு தியைச் சேர்ந்தவர் யுவராஜ். ஆட்டோ தொழி லாளியான இவர் சிஎன்ஜி ஆட்டோ பர்மிட்டுக் காக பலமுறை சேலம் மேற்கு வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் மனு அளித்திருந் தார். ஓட்டுநர் உண்மைத்தன்மை அறிய வட் டாரப் போக்குவரத்து அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப் பாக, சிஎன்ஜி ஆட்டோ வாகனம் சம்பந்தமாக போக்குவரத்து ஆணையர் உரிய உத்தரவு பிறப்பித்தும், போக்குவரத்து அதிகாரிகள்  இதுவரை அமல்படுத்தாத நிலை நீடித்து வரு கிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பலமுறை போக்குவரத்து அலுவல கத்தில் மனு அளித்தும், இதுவரை போக்குவ ரத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக் கவில்லை. குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் உரிய விளக் கம் தராததால், ஆவேசமடைந்த ஆட்டோ தொழிலாளி, திங்களன்று ஆட்சியர் வாகனம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தேசிய ஒருமைப்பாடு முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் தேர்வு

திருப்பூர், பிப்.5- கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா பல்கலைக்கழகத் தில் நடைபெற உள்ள தேசிய ஒருமைப்பாடு முகாமிற்கு திருப் பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்  திட்டம் அலகு – 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் சார்பில் கர்நாடக மாநிலத்தில் உள்ள குல் பர்கா பல்கலைக்கழகத்தில் 6 ஆம் தேதி (இன்று) முதல்  வரும் 12 ஆம் தேதி வரை தேசிய ஒருமைப்பாடு முகாம் நடை பெற உள்ளது. இம்முகாமில் தமிழ் நாடு, மத்திய பிரதேசம்,  கர்நாடகா, ஒடிசா, தெலுங்கானா, மகராஷ்டரா போன்ற பல  மாநிலங்களில் இருந்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். தமிழ் நாடு அணிக்காக  பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பத்து பேர் தேர்வு  செய்யப்பட்டுள்ளார்கள். இதில், திருப்பூர் சிக்கண்ணா அரசு  கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு – 2யை  சேர்ந்த நவீன்குமார் (விலங்கியல் துறை) மற்றும் கயல்விழி  (கணினி பயன்பாடுத்துறை) ஆகிய இருவர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். தமிழ்நாடு அணிக்கு தலைமையேற்று அழைத்து செல்ல சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு  நலப்பணித் திட்டம் அலகு  2 ஒருங்கிணைப்பாளர் மோகன்கு மார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களை திங்களன்று  சிக் கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும்  பேராசிரியர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு: பிப்.13க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

திருப்பூர், பிப். 5- திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற  உள்ள அகில இந்திய துணைத் தொழிற்தேர்வுக்கு பிப்ரவரி 13  ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்  பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த 2017 ஆம்  ஆண்டு இரண்டாண்டு தொழிற்பிரிவில் சேர்க்கை செய்யப் பட்டு தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு ஏப்ரலில் நடைபெறுகிறது. எனவே, பயிற்சி காலத்தை நிறைவாக முடித்து தேர்ச்சியடையாத தேர்வு எழுத விருப்பமுள்ள பயிற்சியாளர்கள் திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிப்ரவரி 13 ஆம் தேதிக் குள் தங்களது பெயரை பதிவுசெய்து தேர்வுக் கட்டணம்  செலுத்தவேண்டும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்க ளுக்கு திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 0421-2429201 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

15.வேலம்பாளையத்தில் நாளை மின் தடை

திருப்பூர், பிப்.5- 15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந் திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதி களில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதி காரிகள் தெரிவித்துள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகள்:  ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர்,  தண்ணீா்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே-அவுட், போயம்பாளை யம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப் பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பா ளையம்புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பரா யன் கோயில் பகுதி, சொர்ணபுரி லே-அவுட், ஜீவா நகர்,  அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன்பூண்டி விவேகா னந்த கேந்திரா பகுதி மற்றும் டிடிபி மில்.

நாளை மின்நுகர்வோர் கூட்டம்:

உடுமலை, ஜன.5- மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கி ழமை) காலை 11 மணிக்கு உடுமலை செயற்பொறியாளர் அலு வலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  கூட்டம் உடுமலை கோட்டத்தின் மேற்பார்வை பொறியாளர்  இராஜாத்தி தலைமையில் நடைபெறும் என்றும். இக்கூட்டத் தில் விவசாயிகள் மற்றும் மின் நுகர்வோர் தங்களுடைய குறை களை தெரிவிக்கும் படி செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித் துள்ளார்.

தூலிப் மலர்கள் - ரசித்த சுற்றுலாப் பயணிகள்

உதகை,பிப். 5- ஹாலந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தூலிப் மலர்களை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனில்  உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்ப தற்காக, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத் தப்படுகிறது. மேலும். வெளிநாட்டு வகை மலர்களும் இதில் பயன்படுத்தப்படுகிறனர். கடந்த காலங்களில் ஹாலந்து  நாட்டில் இருந்து தூலிப் மலர்கள் கொண்டு வரப்பட்டு, காட்சி  மாடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டன. இந்நிலையில், முதல்முறையாக கடந்த ஆண்டு தூலிப் மலர்நாற்றுக்கள் கொண்டு வரப்பட்டு, சோதனை முயற்சியாக தாவரவியல் பூங்கா நர்சரியில் நடவு செய்யப்பட்டன. இவற்றை மிகவும்  பாதுகாப்புடன் பூங்கா ஊழியர்கள் பராமரித்து வந்தனர். இந்த  செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்தன. இவற்றை  சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். சோதனை முயற்சி வெற்றியடைந்ததை தொடர்ந்து, இம்முறையும் தாவ ரவியல் பூங்காவில் தூலிப் மலர்கள் நடவு செய்யப்பட்டன. இம்முறை 250 தொட்டிகளில் நாற்றுகள் நடவு செய்யப் பட்டன. தற்போது சில தொட்டிகளில் ஊதா மற்றும் மஞ்சள்  நிறத்தில் தூலிப் மலர்கள் பூத்துள்ளன. இவை கண்ணாடி மாளிகையில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த தூலிப் மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். அனைத்துசெடிகளிலும் மலர்கள் பூத்தவுடன், அவை சுற்றுலாப் பயணிகள் பார்வைக் காக கண்ணாடி மாளிகையில் வைக்கப்படும் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

1000 அடி பள்ளத்தில் குதித்து இளைஞர் தற்கொலை

நீலகிரி, பிப்.5- குன்னூர் டால்பின் நோஸ் காட்சிமுனையில் 1000 அடி  பள்ளத்தில் குதித்து சுற்றுலாப்  பயணி தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூரிலிருந்து 12 கி.மீ. தொலை வில் உள்ளது டால்பின் நோஸ்  காட்சிமுனை. கடல் மட்டத் தில் இருந்து சுமார் 6000 அடி உயரத்தில் உள்ள இம்மலையின்  வலது மற்றும் இடது புறங்களில் பரவசமூட்டும் பள்ளத் தாக்குகள், மறுபக்கத்தில் கேத்தரின் நீர்வீழ்ச்சியும் காணப் படும். இதனை காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் டால்பின்  நோஸ் காட்சிமுனைக்கு வந்த ஆந்திரா மாநிலம் குடலி கோட்டா பகுதியைச் சேர்ந்த சித்தார்த் ஆசாம் (32) என்ற   சுற்றுலாப் பயணி, திடீரென 1000 அடி பள்ளத்தில் குதித்து  தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அலரியடித்து ஓடினர்.  பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர்  வனத்துறை,  காவல் துறை மற்றும் தீயனைப்பு துறையி னர் தற்கொலை செய்தவரின் உடலை மீட்கும் பணியில் ஈடு பட்டனர்.

ரேஷன் அரிசி கடத்தல்: 4 பேர் கைது

ஈரோடு, பிப்.5- கர்நாடக மாநிலத்துக்கு, ரேஷன் அரிசி கடத்திய 4 பேரை  குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி, ராஜீவ் நகர் பகுதியில், ரேஷன் அரிசியை கடத்தி  செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை போலீசார் அப்பகுதியில் சோதனை யிட்டனர். அப்போது, ஒரு வீட்டில் 23 மூட்டைகளில் 1,150  கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதுகுறித்து, போலீசார் மேற்கொண்ட விசாரணை யில், கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், ஹாலகுரு ஹோப்பிலி பகுதியைச் சேர்ந்த, அனந்தா(26), சிவாஜி(26), ரவி(25), சூர்யா (25) ஆகியோர் பண்ணாரி மற்றும் அதன்  சுற்றுப்புற பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து, கர்நாடக மாநிலத்துக்கு கடத்தி சென்று, அதிக  விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதைய டுத்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் 4 பேரை கைது செய் தனர். மேலும், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 1, 150 கிலோ  ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக் கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ரோஜா கண்காட்சி – தயாரிப்பு பணி தீவிரம் 

நீலகிரி, பிப்.5- உதகை ரோஜா பூங்காவில் மே மாதம் நடைபெற உள்ள  ரோஜா கண்காட்சிக்காக 32 ஆயிரம் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி துவங்கியது. சுற்றுலா நகரமான உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தோட்டக்கலை துறை  மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி போன்ற வைகள் நடத்தபடுவது வழக்கம். இந்நிலையில் உதகை அரசு  ரோஜா பூங்காவில் 19-வது ரோஜா கண்காட்சி மே மாதம் நடைப்பெற உள்ளது. இதனையடுத்து ரோஜா பூங்காவில் உள்ள 4201 ரகங்களிலான 32ஆயிரம் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி திங்களன்று தொடங்கியது. இந்த  பணியினை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா தொடங்கி வைத்தார்.

குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் முற்றுகை

கோவை, பிப்.5- பொள்ளாச்சி அடுத்துள்ள தென் குமார பாளையம் கிராம மக்கள் முறையான குடிநீர்  வசதி கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத் துள்ள தென் குமாரபாளையம் கிராமத்தில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ள அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நாளொன் றுக்கு 90 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங் கப்பட்டு வந்த நிலையில், தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும்,  குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் இருப் பதாக வேதனை தெரிவிக்கின்றனர். இந்நி லையில், முறையான குடிநீர் வசதி கேட்டு  பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை, கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்திற்கு கத்தியுடன் வந்த பெண்

கோவை, பிப்.5- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு, கத்தியோடு வந்த பெண்ணால் பர பரப்பு ஏற்பட்டது. கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந் தவர் மரகதவல்லி. இவர் நிலத்தகராறு தொடர்பாக பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார். புகாரின்  பேரில் இதுவரை வழக்கு செய்யப்பட வில்லை. இதனால், விரக்தி அடைந்த மரகத வல்லி கையில் கத்தியுடன் கோவை மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் வந்தார். இதனை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் உட னடியாக அந்த பெண்ணை சமாதானப்ப டுத்த முயன்றனர். ஆனாலும் அந்த பெண் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து  காவல்துறையினர் அந்த பெண் வைத்தி ருந்த கத்தியை பிடுங்கி, அவரை பந்தய சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஈரோடு வனக்கோட்டத்தில் 24 ஆயிரம் பறவைகள்

ஈரோடு, பிப்.5- ஈரோடு வனக்கோட்டத்தில் 24,000க் கும் மேற்பட்ட பறவைகள் உள்ளது என வும், 15 புதிய இனங்கள் அடையா ளம் காணப்பட்டுள்ளது எனவும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சத்தி யமங்கலம், ஆசனூர் ஆகிய 3 வனக் கோட்டங்களில் ஈரோடு, அந்தியூர், பர் கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை ஆகிய  5 வனச்சரகங்கள் உள்ளன. ஈரோடு  வனக்கோட்டத்தில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட  21 ஏரி, குளங்களில் இந்த ஆண்டுக் கான பறவைகளை கணெக்கெடுப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத் தப்பட்டது. இதில், வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர் கள் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள், நிபுணர்கள் என 140 பேர் பங்கேற்றனர். இந்த கணக்கெடுப்பில், கண்ணில் தெரியும் பறவைகள், அவற்றின் இனங் கள், சத்தம், அவை மொத்தமாக உள்ள  பகுதிகள் ஆகியவற்றை அடிப்படை யாக வைத்து கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. வெள்ளோடு பறவைகள் சர ணாலயம், கனகபுரம் ஏரி உள்ளிட்ட இடங்களில் நிரந்தரமாக காணப்படும் பாம்புதாரா, சிறிய, பெரிய நீர் காகங் கள் உள்ளிட்ட பறவைகள், பிற இடங்க ளில் இருந்து வந்து செல்லும் நெடுங் கால் உள்ளான், ஊசிவால் வாத்து, மஞ்சள் வாலாட்டி, மண்கொத்தி, மாங் குயில், சாம்பல் நாரைகள் போன்ற உள்ளூர் பறவைகளும், நீலமுக பூங்கு யில், உப்புக்கொத்தி போன்ற வலசை பறவைகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகளும் இக்கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டன. ஈரோடு வனக்கோட்டத்தில் ஈரோடு,  பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய 6  வட்டங்களில் 21 இடங்களில் பறவை கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ஈரோடு வன கோட்டத்தில் மட்டும்  மொத்தம் 24,000க்கும் மேற்பட்ட பறவை கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. 206 விதமான பறவை இனங்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில்  15 வகையான பறவை இனங்கள்  புதியவை என்பதும் தெரியவந்துள்ள தாக வனத்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

கோபி, பிப்.5- நம்பியூர் - பழங்கரை சாலை விரிவாக்கப் பணிகள் தொடங் கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூரில் நெடுஞ்சாலைதுறையின் சார்பில் சாலை விபத்துக்களை தவிர்க்க பல்வேறு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வரு கின்றனர். இதன் அடிப்படையில் நம்பியூர் - பழங்கரை சாலையை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுமார் 10 கிமீ தூரம் வரையில் ரூ.7கோடியே 75 லட்சம் மதிப் பீட்டில் 5மீட்டர் சாலையை 7மீட்டர் சாலையாக விரிவுப டுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் குறுகிய பாலங் களுக்கு பதிலாக, பெட்டிப் பாலங்கள் அமைக்கப்பட உள் ளது. இதனால், நம்பியூர், கெடாரை, மலைப்பாளையம் வழி யாக பழங்கரை செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுக்கூட ஊழியர் மீது தாக்குதல்

நாமக்கல்,பிப்.5- பள்ளிபாளையம் அருகே டாஸ்மாக் மதுபானக்கூட ஊழி யரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த தாஜ்  நகரில் வசிப்பவர் மணிகண்டன்(27). இவரது சொந்த  ஊர் புதுக்கோட்டை. வெப்படை அருகே உள்ள ஆனங் கூரில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கூடத்தில், வேலை  செய்து வருகிறார். ஞாயிறன்று இரவு வேலை முடிந்து  சின்ன ஆனங்கூர் அருகே நடந்து வந்த போது, அவரை  வழிமறித்து நான்கு பேர் அடித்து, உதைத்தனர். இது  குறித்து மணிகண்டன் வெப்படை போலீசில் புகார்  அளித்தார். உதவி ஆய்வாளர் பாலமுருகன், மலர்விழி வழக்குப்பதிவு செய்து ரங்கனூரை சேர்ந்த நித்திஷ்(22), அண்ணா நகரை சேர்ந்த சக்திவேல்(19), ஆவாரங்காடு பகு தியை சேர்ந்த கவுதம்(23), தேனியை சேர்ந்த அஜித்(24), ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

சாலையில் தேங்கிய கழிவு நீர்

உதகை,பிப். 5- பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் சாலையில் தேங்கியதால் உதகை அப்பர் பஜார் பகுதி பொது  மக்கள் அவதிக்கு உள்ளகினர்.  உதகை அப்பர் பஜார் பகுதியில் ஏராளமான குடியிருப்பு கள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் சாலையில் தேங்கி உள்ளது. அதேபோல், உதகை ஹாம்ஸ் ஹவுஸ் சாலையில் கடந்த ஒரு வாரமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் ஆறு போல  சாக்கடை கழிவுநீர் ஓடுகிறது. இதுகுறித்து உதகை நகராட்சி  நிகர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இருப்பி னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள், உடனடியாக கழிவு நீர் வாய்க்கா லில் உள்ள அடைப்பை சரி செய்து சீரமைக்க வேண்டும் என  வேண்டுகோள் விடுத்தனர்.

போக்சோவில் ஒருவர் கைது 

நாமக்கல் ,பிப்.5 பள்ளிபாளையத்தில் மாணவியை  கடத்தி சென்ற வழக் கில் இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த வெப்ப டையை பகுதியை சேர்ந்த சதீஷ்(22). இவர், வெப்படை யில் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவியை  காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, சில நாட்களுக்கு முன்பு,  மாணவியை கூட்டி சென்று விட்டார். மாணவியின் தந்தை வெப்படை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர்கள் பாலமுருகன், மலர்விழி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். வெளியூரில் தலை மறைவாக இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் வெப்படை அழைத்து  வந்தனர். இதனைத்தொடர்ந்து மாணவியை ஆசை வார்த்தை  கூறி ஏமாற்றியதாக போக்சோ வழக்குபதிவு செய்து சதீசை  கைது செய்தனர்.

சாலையில் உலா வந்த புலி 

உதகை,பிப். 5- சாலையில் புலி ஒன்று இரவு நேரத்தில் உலா வந்ததை  கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.  கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புலி, கரடி,  உள்ளிட்ட வனவிலங்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி குடி யிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளிலும் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து சேலாடா செல்லும் சாலையில் இரவு நேரத்தில் புலி  ஒன்று உலா வந்துள்ளது. இதனை கண்ட வாகன ஓட்டி கள் அச்சம் அடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகள் இந்த  காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங் களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வரு கிறது. வன விலங்குகள் சாலையை கடக்கும் இடங்களில் வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது, இப்பாதையின் வழியே செல்கிற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்க ளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என கோரிக்கை எழுந்துள் ளது.

காவல் அதிகாரியை தாக்கிய நபர் கைது

சேலம், பிப்.5- சேலம் மாவட்டம், தேவூரை அடுத்த புல்லாகவுண்டம் பட்டி, அக்ரஹாரம் கிராமம், கோவிந்தன்காட்டு வலசு பகு தியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (42). இவர் ஊராட்சி மன்ற அலு வலகம் அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு  செய்து வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தேவூர் காவல்  நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தேவூர் காவல் நிலைய சிறப்பு உதவி  ஆய்வாளர் மதியழகன் மற்றும் முதுநிலை காவலர் மயில்சாமி  ஆகிய இருவரும், தகராறில் ஈடுபட்ட ஆனந்தனை எச்சரித்து  வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். அதற்கு ஆனந்தன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மதியழகன் மற்றும் முது நிலை காவலர் மயில்சாமி ஆகிய இருவரையும் தகாத  வார்த்தையில் பேசி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கி  கீழே தள்ளியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் தேவூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் ஆனந்தன், ஏற்கனவே ஒரு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, சிறைத்தண்டனை பெற்று தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில உரிமை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க திமுக முடிவு

தருமபுரி, பிப்.5- சிபிஎம் சார்பில் பிப்.8 ஆம் தேதியன்று நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில், பெருந் திரளானவர்கள் பங்கேற்க திமுக முடிவு  செய்துள்ளது. திமுக தருமபுரி தெற்கு மாவட்ட ஆலோ சனை கூட்டம் தருமபுரியில் உள்ள அக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் மாநில உரிமைகளை காக்க வும், ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  வரும் பிப்.8 ஆம் தேதியன்று மாவட்ட  தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்க  வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார் அழைப்பு விடுத்தார். அதன்படி, கழக நிர்வா கிகள், தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு  எடுக்கப்பட்டது. முன்னதாக, இக்கூட் டத்தில் மாவட்டப் பொருளாளர் தங்கமணி, துணைச்செயலாளர் உமாசங்கர், பொதுக் குழு உறுப்பினர் நட்ராஜ், நகரச் செயலா ளர் நாட்டான் மாது, ஒன்றியச் செயலாளர் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

மூடிய கிணற்றை மீண்டும் தோண்டுவதா ஊராட்சி மன்ற தலைவரின் நடவடிக்கையால் அதிர்ச்சி

நாமக்கல், பிப்.5- பாழடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்த கிணற்றை மூடிய பிறகு மீண்டும் ஊராட்சியில் தீர்மானம் இயற்றி கிணற்றை  உள்நோக்கத்துடன் மீண்டும் தோண்டி யுள்ளதாக ஊரட்சி தலைவர் மீது குற்றம் சாட்டி நாமக்கல் ஆட்சியரிடம் கிராம மக் கள் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட் டம் முத்துக்காப்பட்டி ஊராட்சி. இங்கு மேதரா மாதேவி என்ற கிராமத்தில், இரண்டு ஆண்டு களுக்கு முன்னாள் பாழடைந்த கிணற்றை கிராம நிர்வாகம் சார்பில் வருவாய் துறை மூடி யது. இந்நிலையில், தற்போது  ஊராட்சி மன்ற  தலைவராக இருக்கும் அருள் ராஜேஷ், மூடிய கிணற்றில் தங்கம்மண் (கழிவு மண்ணை பிரித்து தங்கம் எடுக்கும் பணிக்கு)  இருப்பதாக கருதி, கிராம ஊராட்சி உறுப்பி னர்கள் ஒத்துழைப்போடு தீர்மானம் நிறை வேற்றியுள்ளார். மேலும், கிணற்றை சனி யன்று தோண்டி அங்குள்ள மண்ணை அள்ள  முயற்சி செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து கிராம மக்கள் மண்ணை அள்ள வந்த  ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்து முற்று கையிட்டனர்.  இதனையடுத்து, கிராம ஊராட்சி மன்ற தலைவர் அருள் ராஜேஷ், அடியாட்களை கொண்டு பொதுமக்களையும், முற்றுகை யிட்ட மக்களையும் அச்சுறுத்தி வருவதாக வும், இரவு நேரங்களில் மோட்டார் சைக்கி ளில் வந்து  மக்களை ஆபாச வார்த்தைக ளால் பேசி இடையூறு செய்வதாக கூறி மேத ராமாதேவியை சேர்ந்த 200-க்கும் மேற்பட் டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர்.

சாலையில் உலாவிய காட்டு யானை

ஈரோடு, பிப்.5- தேசிய நெடுஞ்சாலை ஆசனூர் அருகே சாலையில் காட்டு யானை உலாவியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மை சூர் தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப் போது காட்டு யானை கடந்து செல்வது வாடிக் கையாக இருந்து வருகிறது. இந்த நிலை யில், ஆசனூர் அருகே அரேப்பாளையம் பிரிவு என்ற இடத்தில் வனப்பகுதியை விட்டு  வெளியேறிய ஒரு காட்டு யானை சாலை யில் நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சம டைந்தனர். சிறிது நேரம் சாலையில் அங்கும்  இங்கும் நடமாடிய காட்டு யானை பின்னர்  மெதுவாக சாலையை கடந்து அடர்ந்த வனப்  பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதி யில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. யானைகள் பகல் நேரத்தில் சாலை யில் நடமாடுவதால் வாகனங்களில் செல் வோர் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ள னர்.