தருமபுரி, ஜன.18- வாழ்வாதாரத்தை பாதிக்கும் பாரதிய நியாய சன்ஹிதா என்ற புதிய சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு பாரதிய நியாய சன் ஹிதா என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ், விபத்துக்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் கடுமையான தண்டனை களை எதிர்கொள்கின்றனர். இது ஐபி பியின் கீழ் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனையிலிருந்து, புதிதாக கொண்டுவந்துள்ள சட்டம் மூலம் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.7 லட் சம் அபராதம் விதிக்கப்படலாம். இத னால், ஓட்டுநர்களின் வாழ்க்கை பாதிக் கப்படும். சிறு சிறு கவனக்குறைவாக ஏற்படும் தவறுகளுக்கு கூட அதிக பட்ச தண்டனை கிடைக்கும். எனவே, இந்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும் பப்பெற வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஓட்டுநர்கள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓட்டு நர்கள் சங்க மாவட்டத் தலைவர் முனி யப்பன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் பரமசிவம், மாவட்டப் பொருளாளர் ராமசுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் செந் தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் ஆட்சி யர் அலுவலகம் முன்பு சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு, மாவட்டத் தலைவர் செல் லத்துரை தலைமை வகித்தார். வழக் கறிஞர் நல்வினை விஸ்வராஜீ துவக்கி வைத்து கண்டன உரையாற் றினார். இதில், மாவட்ட கொள்கைப் பரப்பு செயலாளர் கவின் குமார் வர வேற்றார். மாநில இணைச்செயலாளர் செந்தில்குமார், மாநில, மாவட்ட மற் றும் நகர அனைத்து சமூக நீதி ஓட்டு நர்கள் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு புதிய வாகன திருத்த சட்ட மசோதாவினை திரும்ப பெற கோரி முழக்கங்களை எழுப்பினர். இதில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்க ஊழியர்கள் பங்கேற்றனர் பின்னர் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் வழங்கினர்.