districts

img

பெரியார் பல்கலை., துணைவேந்தர், பதிவாளரை பதவி நீக்கிடுக

சேலம், பிப்.16- சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் விதிமீறல், ஊழல் முறை கேடுகளில் ஈடுபட்டு நிரூபணம் ஆகி யும், இதுவரை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய மாணவர் சங் கத்தினர் பெரியார் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரு கிறது. குறிப்பாக, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் ஆகியோர் தொடர் குற்றச்செயல்கள் மற்றும் ஊழல் முறைக்கேட்டில் ஈடுபட்டு  வருகின்றனர். இதுசம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொண்டு, குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்பும், இதுவரை பல்கலைக்கழக துணைவேந்தர் மற் றும் பதிவாளரை தகுதி நீக்கம்  செய்யவில்லை. மேலும், இப்பிரச்ச னையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, துணைவேந்தர் மற்றும் பதிவா ளருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.  பெரியார் பல்கலைக்கழகத் தில் தமிழக ஆளுநர் நேரடியான தலையீடு செய்து வருகிறார். குறிப் பாக, மாணவர்கள் மத்தியில் இந் துத்துவா கொள்கைகளை பரப்பி வரும் செயல் நீடித்து வருகிறது. பெரியாரின் பெயரில் செயல்பட்டு  வரும் பல்கலைக்கழகத்தில் சாதிய,  மத போதனைகள் அதிகம் அரங் கேறி வருவதாகவும், மாணவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத் தும் வகையில் பல்கலைக்கழக நிர் வாகத்தினர் செயல்பட்டு வருவதா கவும் இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில், ஊழல் முறை கேடு உள்ளிட்ட குற்றச்செயல்க ளில் ஈடுபட்டு வரும் துணைவேந் தர் மற்றும் பதிவாளர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வியாழனன்று இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பவித் ரன் தலைமை வகித்தார். இதில்  மாணவர் சங்கத்தின் மாநிலத் தலை வர் தௌ.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ.அரவிந்சாமி, மாநில நிர்வாகி தே.சரவணன், சேலம் மாவட்டக்குழு உறுப்பினர் கள் கோகுல், டார்வின், கீர்த்தி வாசன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.