கோபி, மே 9- சூறாவளி காற்றினால் முறிந்து சேத மான வாழை மரங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணைப்பாசன பகுதிகளான சித்தன் குட்டை, அய்யம்பாளையம், புங்கம் பள்ளி, பனையம்பள்ளி உள்ளிட்ட பகு திகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கதளி, நேந்திரன், மொந் தன், செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் வாழை சாகுபடி செய்யப்பட் டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பவானிசாகர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றினால் அறுவடைக்கு தயாராக இருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம டைந்தன. வாழை அறுவடை செய்யும் வரை ஒரு ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவாகி றது. அறுவடை சமயத்தில், வாழைகள் முற்றிலும் சேதமானதால் செலவுக்கு வாங்கிய கடனைக்கூட கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரி முத்து, மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி ஆகியோர் கொண்ட குழு, வாழை மரங்கள் சேதமானது குறித்து நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து, சேதமடைந்த வாழை மரங்களை கணக் கீடு செய்து, தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.