தருமபுரி, பிப்.9- சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத் திய அமைப்பின் சார்பில் மின் ஊழியர் களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை பட்டியல் வெளியிடப்பட்டது. சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் தமிழ்நாடு பவர் இன்ஜி னியர்ஸ் ஆர்கனைசேஷன் சார்பில் கோரிக்கை பட்டியல் வெளியீட்டு விழா தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட தலைவர் தி. லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பி.ஜீவா, மாவட்ட பொருளாளர் எம்.ஜெயக்குமார், டிஎன்பி இஒ மாநிலச் செயலாளர் முனிராஜ், பொறி யாளர் அமைப்பின் மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். முன்னதாக கோரிக்கை பட்டியலை மாநில துணைத் தலைவர் பி.ஜீவா வெளி யிட, பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனை சேஷனனின் மாநில செயலாளர் முனி ராஜ் பெற்றுக்கொண்டார். இதில், சம்மேளன மாநில துணைத் தலைவர் தேவராஜ், சிஐ டியு மாவட்ட பொருளாளர் ஏ.தெய்வானை, பொறியாளர் சங்க திட்ட செயலாளர் முரளி, பொறியாளர் கழக திட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு, கோபிசெட்டிபாளையம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற கோரிக்கை வெளியீடு நிகழ்ச்சிக்கு ஏ.சக்திவேல் தலைமை வகித்தார். இதில், கிளைத் தலைவர் பி.சேகர், கிளைச் செயலாளர் கே.பாண்டியன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினர். இதில், சிஐ டியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகி வேலுச் சாமி, விவசாய தொழிலாளர் சங்க நிர் வாகி ஆர்.மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.