districts

img

அரசு மருத்துவமனைகளில் மாதர் சங்கத்தினர் ஆய்வு

ஈரோடு, ஏப்.7- உலக சுகாதார தினத்தையொட்டி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தினர், தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற் கொண்டனர். பின்னர், இதுதொடர்பான கோரிக்கை மனுக்களை துறை அதி காரிகளிடம் அளித்தனர். அனைந்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் கடம்பூர் மலை வட்டார  கமிட்டியின் செயலாளர் எஸ்.தாயி லம்மாள் தலைமையில் கடம்பூர் சுகா தார நிலையத்தில் நோயாளிகளுக்கு தேவையான, முறையான சிகிச்சை கிடைக்கிறதா? மருத்துவர்கள் உள்ளன ரா? என்பது குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, கடம் பூர் மலை மருத்துவமனையில் வெறும் மூன்று படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. சுமார்  30 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் தொகை கொண்ட இந்த  பகுதியில் 30க்கும் மேற்பட்ட படுக்கை கள் இருக்க வேண்டும். எனவே, சுகா தார நிலையத்தை, மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதேபோல, ஈரோடு வட்டம், நசியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. மாவட்ட செயலாளர் பா. லலிதா, என்.கலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை

இதேபோன்று, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கோவை மாவட்ட குழு சார்பாக,கோவை மாவட்ட அரசு மருத்துவமணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பாடுகள் மற்றும்  சேவை குறித்த ஆய்வு செய்யப்பட் டதை உலக சுகாதார தினத்தையொட்டி ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. கோவை மாவட்டத்தின் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனை, மேட் டுப்பாளையம் மருத்துவமனை, ஆரம்ப  சுகாதார மையங்கள், துணை சுகா தார மையங்கள் ஆகியவற்றில் அவற் றின் நிலை குறித்த ஆய்வு செய்யப்பட் டுள்ளது. இதுகுறித்து மாதர் சங்க கோவை மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செய லாளர் சுதா தலைமையில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது, கோவை மாவட்டத்தில் அரசு மருத் துவக்கல்லூரியுடன் இணைந்து அரசு மருத்துவமனையும், மேட்டுப்பாளை யம், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்க ளில், அரசு மருத்துவமனையும் கிராம  நகரப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், சுகாதார மையங்க ளும் இயங்குகின்றன. குறிப்பாக இந்த மருத்துவ மையங்கள் காலை 9 மணி முதல் திறந்து இருக்கிறது. மதியம் 2 மணி வரை மட்டுமே மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக் கள் வாழும் பகுதிகளிலேயே அமைந்துள் ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய படுக்கை வசதி இல்லாமல் இருக்கின்றது. சளி, தைராய்டு உள் ளிட்ட மருத்துவ ஆய்வுகளுக்கு போதிய உபகரணங்கள் இல்லை. கழிப் பிட வசதி போதுமானதாக இல்லை, இருக்கும் கழிப்பிடங்களும் சரிவர பரா மரிக்கப்படுவதில்லை. கோவை மாவட் டம் புலியகுளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டு நான்கு மாதம் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. அனைத்து தடுப்பூசிகளும், மருந்துகளும் கிடைக்கிறது. கோவை  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை,  கோவை அரசு மருத்துவமனை யிலும் போதிய படுக்கை வசதி இல்லாத தால் நோயாளிகள் விரைவில் வீட்டிற் குச் செல்ல வற்புறுத்தப்படுகின்றனர். கழிப்பிடம் வசதி எல்லா இடங்களிலும் இருந்தாலும், போதுமானதாக இல்லை இருப்பவையும் சுத்தமாக பராமரிக்கப் படுவது கிடையாது, கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் இரவு நேரங் களில் துறை சார்ந்த மருத்துவர்கள் இருப் பது இல்லை என்ற குற்றச்சாட்டை  நோயாளிகள் மற்றும் உடன் தங்குபவர் களும் முன்வைக்கின்றனர்.  கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை  பிரிவில் வருபவர்களை அட்டெண்டர் இல்லாமல் அனுமதிப்பதை தவிர்க்கின் றனர். மேலும், நோயாளிகளை உடனடி யாக அவசரகால உதவி செய்து காக்க  வேண்டும். அட்டெண்டர் இருந்தால் மட் டுமே உதவி என்பது தவிர்க்கப்பட வேண் டும். அவசர கால மற்றும் சில மருந்து களை வெளியில் வாங்கி பயன்படுத் தும் சூழ்நிலை நோயாளிகளுக்கு ஏற்படு கிறது சில மருந்துகள் வெளியில் மட் டுமே கிடைக்கிறது.

மருத்துவ உபகரணங்கள் பழுத டைந்தால் உடனடியாக சரி செய்வது என்பது இல்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவ உபகரணங்களின் எண் ணிக்கையை அதிகப்படுத்தினால் காத் திருக்கும் அவகாசம் குறைக்கப்படும். மருத்துவமனைகளில் ஒப்பந்த ஊழியர் களின் எண்ணிக்கை குறைவாக உள் ளது. இதனால் சுகாதாரம் பேணும் விஷ யத்தில் சுனக்கம் ஏற்படுகிறது. படுக்கை வசதிகள் குறைவாக உள்ளது மேற்படிப் புக்காக செல்லும் மருத்துவர்களின் காலிப்பணியிடங்கள், விடுப்பு காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப் படுவதில்லை. தீக்காயப் பிரிவில் குளிர் சாதன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், குளிர்  சாதன வசதி செய்யப்படாததால் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளா கின்றனர்.  செவிலியர்கள், பணியாளர்கள் நோயாளிகளிடம் அணுகும் முறையில் கூடுதல் கவனம், கனிவும் தேவைப்படு கிறது. வழக்கு சார்ந்து வரும் நோயா ளிகளிடம் ஊழியர்கள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். வீட்டிற்கு விரட் டுவதையே குறிக்கோளாக கொண்டுள் ளார்கள். கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி 80 சதவிகிதம் (கிட்) உடனடியாக கிடைக் கிறது 20 சதவிகிதம் கிடைப்பதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. அரசு மருத்துவம னைதில் வெளி நோயாளிகள் 950 முதல் 1200 வரை தினசரி வந்து செல்கின்ற னர். இதில், அனுமதிக்கப்படும் நோயா ளிகள் வார்டு வாரியாக 90 முதல் 100  வார்டுக்கு மொத்த படுக்கை வசதி 146 மட்டுமே உள்ளது, ஆனால், தேவை யான படுக்கைகள் 170 ஆகும். அதேபோல போதுமான ஊழியர் கள் இல்லை. அரசு மருத்துவமனையில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி துறைகளுக்கு தனி மருத்துவர்கள் மற் றும் தனி கட்டடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது உள் ளிட்ட அறிக்கையை வெளியிட்டனர். இந் நிகழ்வில் மாவட்ட தலைவர் ஜோதி மணி, மாநில குழு உறுப்பினர் ராஜலட் சுமி, மாவட்ட பொருளாளர் உஷா ஆகி யோர் பங்கேற்றனர்.