districts

img

தவறான சிகிச்சை காரணமாக பெண் உயிரிழப்பு அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியல்

சேலம், ஜன.3- தவறான சிகிச்சை காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்தாக குற்றம்சாட்டி, உற வினர்கள் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  சேலம் மாவட்டம், சிவதாபுரம் அருகே உள்ள பெருமாள் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி மணிமேகலை (25). நிறைமாத கர்ப்பிணியான மணிமேகலை, கடந்த டிச.31 ஆம் தேதியன்று சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப் பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார் அவ ருக்கு ஜன.1 ஆம் தேதியன்று அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பெண்ணுக்கு திடீரென ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து செவ்வா யன்று இரவு மணிமேகலை உயிரிழந்தார்.  இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் உறவி னர்கள் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் முன்பு பெண்ணின் இறப்பிற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா தலைமையில் சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீ சார், போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன்பிறகு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வரை சந் தித்து மனு அளிக்க காவல் துறையினர் அனு மதி அளித்தனர். இதனையடுத்து மருத்துவ முதல்வரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலா ளர் மேவை.சண்முகராஜா கூறுகையில், நல்ல நிலையில் இருந்த பெண், திடீரென ரத் தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக  மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது. அறுவை சிகிச்சை செய்த பிறகு குழந்தை நல்ல முறையில் பிறந்துள்ளது. மேலும் தாயும் நன்றாக இருந்த நிலை யில், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக் கின்றனர். மருத்துவமனை நிர்வாகம் தவறை மறைக்கப்பார்க்கிறது. தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாகவே பெண் உயிரிழந் துள்ளார். மேலும், மருத்துவமனையில்  போதிய மருத்துவர்கள் இல்லை. எனவே,  மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவ டிக்கை எடுத்து பெண்ணின் இறப்பிற்கு உரிய  நீதி வழங்க வேண்டும், என்றார்.