சேலம், ஜன.2- சேலம் அருகே புத்தாண்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் வாலி பரை அடித்து கொலை செய்த வழக் கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமம், செங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (26). இவருக்கும் அதேபகுதி யைச் சேர்ந்த பாலாஜி, சிவா, பெரு மாள் உள்ளிட்டோருக்கும் டிச.31 ஆம் தேதியன்று இரவு புத்தாண்டு கொண் டாட்டத்தின் போது, வாகனத்தை வேகமாக ஓட்டியது தொடர்பாக தக ராறு ஏற்பட்டுள்ளது. இதனைய டுத்து பாலாஜி, சிவா, பெருமாள் ஆகி யோர் வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து ஸ்ரீதரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த ஸ்ரீதர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், ஞாயி றன்று இரவு சிகிச்சை பலனின்றி பரி தாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஓமலூர் காவல் துறையினர் கூலிப்படையாக செயல் பட்ட வெளியூரைச் சேர்ந்த மோகன், விக்ரம் ஆகிய இருவரை மட்டும் கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட பாலாஜி, சிவா, பெருமாள், வசந்தகுமார் ஆகி யோரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீதரின் உறவினர் கள் சேலம் அரசு மருத்துவமனை முன்பு, உடலை வாங்க மறுத்து மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, ஓமலூர் இடைக்க மிட்டி செயலாளர் என்.ஈஸ்வரன் உள் ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பதின ருக்கு ஆதரவாக மறியல் போராட் டத்தில் பங்கேற்றனர்.