நாமக்கல், செப்.12- சரக்கு போக்குவரத்து நிறுவ னத்தின் சேவை குறைபாடு காரண மாக வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை-நஞ்சப்பா சாலையில் வெல்டிங் இயந்திரங்களை தயா ரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் வெங்கடேஷ். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ. 30,450 மதிப்புள்ள வெல்டிங் இயந் திரத்தை குஜராத்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு டிசிஐ எக்ஸ்பிரஸ் என்ற தனியார் சரக்கு போக்கு வரத்து நிறுவனம் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். அனுப் பிய பார்சலை பிரித்துப் பார்க்கும் போது, வெல்டிங் இயந்திரம் சேத மடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாக குஜராத் நிறுவனத்தினர் தெரிவித்து அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இதையடுத்து, இயந்திரத்தை அனுப்பிய வெங்கடேஷ், சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு இழப்பீடு வழங்குமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த நிறு வனம் இழப்பீடு வழங்கவில்லை. இதனால், சரக்கு போக்குவரத்து நிறுவனம் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு கோவை மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில், வெங்க டேஷ் வழக்கு தாக்கல் செய்திருந் தார். இந்த வழக்கு கடந்த 2022 ஜூலை மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்திற்கு விரை வான விசாரணைக்கு மாற்றப் பட்டு விசாரணை முடிவடைந்து. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஏ.எஸ்.ரத்ன சாமி ஆகியோர் தீர்ப்பு வழங் கினர். இத்தீர்ப்பில், சரக்கு போக்கு வரத்து நிறுவனம் வாடிக்கையாளர் அனுப்பிய வெல்டிங் இயந்தி ரத்தை பாதுகாப்பான முறையில் கையாளாமல் இயந்திரத்தை சேதப்படுத்தி உள்ளது. சேவை குறைபாடு புரிந்துள்ளது. வழக்கு தாக்கல் செய்தவருக்கு சரக்கு போக்குவரத்து நிறுவனம் வெல் டிங் இயந்திரத்துக்கான விலை ரூ. 30,450 மற்றும் போக்குவரத்து நிறுவ னத்தின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.1 லட்சமும், வழக் கின் செலவு தொகையாக ரூ. 5 ஆயிரத்தை நான்கு வார காலத் திற்குள் வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.