districts

img

வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

தருமபுரி, மே 6- டேங்க் ஆப்ரேட்டரை நியமிக்க வலியுறுத்தி நல்லம்பள்ளி  வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள்  முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாகல அள்ளி ஊராட்சி, கெங்கலாபுரம் கிராமத்தில் 100க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு புதிய டேங்க் ஆப்ரேட்டரை பணியமர்த்தி சீரான குடிநீர் வழங் கக்கோரி சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத னால் ஆவேசமடைந்த அப்பகுதி கிராம மக்கள் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திரண்டனர். இதன்பின் பொதுமக்கள் திடீரென அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர் கள் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் தர்ணாவில் ஈடு பட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோரிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்ப தாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் சமாதான மடைந்த கிராம மக்கள் தர்ணாவை கைவிட்டு, அங்கிருந்து  கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.