சென்னை,நவ.21- வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் பதவி உயர்வு பணியிடம் மறுப்பு தெரிவித்துள்ளதற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத் தின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை வருமாறு:- தமிழகம் முழுவதும் தொடக் கக்கல்வித் துறையில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 18.11.2019 ல் தொடங்கி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இக்கலந்தாய்வில் வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் ஆசிரியர் நலன், கல்வி நலன், மாணவர் நலன்களுக்கு எதிரான நிலைபாடு களை தொடக்கக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
18.11.2019 முற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத் திற்குள்) நடைபெற்ற பின்பு ஒன்றிய அளவில் ஏற்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, ஒன்றிய அளவில் தகுதி வாய்ந்த ஆசிரி யர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் பதவி உயர்வை எதிர்பார்த்திருந்த தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை அடைந்துள்ளனர். எனவே, மேற்படி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஒன் றிய முன்னுரிமையின்படி தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்திட தொடக்கக் கல்வித் துறை உடனடி நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். 19.11.2019 அன்று நடைபெற்ற ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்குப் பின்பு ஏற்பட்ட ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரி யர் காலிப்பணியிடங்களில் ஐந்து மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் காலியாக இருந்த தலைமை ஆசிரியர் பணி யிடங்கள் நிரப்பப்படவில்லை.
ஐந்து மாணவர்களுக்குக் குறைவான எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கூடாது என்று எவ்விதமான எழுத்து மூலமான உத்தரவையும் தொடக்கக் கல்வித்துறை பிறப்பிக்காத நிலையில், உயர் அதிகாரிகளின் வாய் மொழி உத்தரவு என்று கூறி தமிழகம் முழுவதும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத னால் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை எதிர் நோக்கி காத்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் தொடக்கக்கல்வித்துறை யில் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றபோது, வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் 10க்கும் குறைவான மாணவர்கள் எண் ணிக்கை கொண்ட 1500க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றப்பட்டன. தற்போது வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் ஐந்து மாணவர்க ளுக்கு குறைவான பள்ளிகள் தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் அப்பள்ளிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஏற்க னவே மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அப்பள்ளி கள், மேலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து மூடப்ப டும் நிலைக்கு தள்ளப்படும். எனவே அப்பள்ளிகளின் நலன் கருதி இக்கலந்தாய்விலேயே தலைமை ஆசிரியர் பணியிடங் களை நிரப்ப தொடக்கக் கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடக்கக் கல்வித்துறையில் வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிருப்தியும், வருத்தமும் ஏற்பட்டுள்ளது. செவ்வாயன்று (19.11.2019) நடைபெற்ற கலந் தாய்வில் ஐந்து மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் திடீரென மறுக்கப்பட்டதை எதிர்த்து திருநெல்வேலி, கரூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங் களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அமைதியான முறையில் போராட் டங்கள் நடைபெற்றுள்ளன.
மிரட்டல்
ஜனநாயக ரீதியில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திய சங்க நிர்வாகிகளை திருநெல் வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டியுள்ளார். அதே போன்று விழுப்புரத்தில் போராட் டம் நடத்திய மாவட்ட நிர்வாகி களை திருக்கோவிலூர் மாவட்டக் கல்வி அலுவலரும், ரிஷிவந்தி யம் வட்டாரக்கல்வி அலுவல ரும் போராட்டச் செய்தி ஊடகங்க ளில் வெளியானால் கடும் நடவ டிக்கை எடுப்பேன் என மிரட்டி யுள்ளனர்.
சங்க நிர்வாகிகள் என்ற முறையில் நியாயத்திற்காகப் போராடியவர்களை அச்சு றுத்தும் வகையில் பேசிய அலு வலர்களை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு மிக வன்மை யாகக் கண்டிக்கிறது. போராடிய நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டால் அதை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் மாநில அமைப்பு நேரடி யாக களத்தில் இறங்கி மாநில அளவில் போராட்ட நடவடிக்கை களில் ஈடுபடும். சங்கத்தின் திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகி களுக்கு மிரட்டல் விடுத்த கல்வித் துறை அலுவலர்கள் மீது பள்ளிக் கல்வித் துறை உரிய விசா ரணை மேற்கொண்டு தக்க நட வடிக்கை மேற்கொள்ள தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணியின் மாநில அமைப்பு வலி யுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.