மாற்றுச்சான்றிதழை தர மறுக்கும் தனியார் கல்லூரி மீது ஆட்சியரிடம் புகார்
நாமக்கல், ஜூன் 10- மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்றிதழ்களை தர மறுக்கும் தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் மீது, மாணவி ஒருவர் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அருகே உள்ள செம் மேடு பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற மாணவி, திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித் தார். அதில் கூறியிருப்பதாவது, நான் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2019 - 2023 ஆம் ஆண்டுக ளுக்கு இடைப்பட்ட காலத்தில் பொறியியல் படிப்பு முடித் தேன். கல்லூரியில் படிக்கும்போது கட்டணத்தொகை ரூ.10 ஆயி ரத்தை கட்டத்தவறி விட்டேன். ஆகையினால், கடந்த வாரம் கல்லூரிக்கு சென்று நான் படித்து முடித்த என்னுடைய மதிப் பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ்கள் இரண்டை யும் கேட்டபொழுது, “ரூ.10 ஆயிரம் கட்டினால் தான் டிசி தரு வேன்” என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துவிட்டனர். மேலும், பணத்தை தரச்சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மலைவாழ் மாணவியான எனக்கு, தற்போது அவ்வளவு தொகை கட்டவசதி இல்லை. ஆகையால், எனது மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்றிதழை மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர் மழையால் வாழை விளைச்சல் சரிவு
கோவை, ஜூன் 10- மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களில் பெய்த தொடர் மழையால் வாழை சாகுபடி பாதிக்கப் பட்ட நிலையில், மொத்த விற்பனை சந்தையில் வாழைத்தார் விலை அதிகரித்து காணப்பட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை, லிங்கா புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் சாகுபடி யாகும் வாழைத்தார்களை தென்திருப்பதி நால்ரோடு பகுதி யில் உள்ள வாழைத்தார் சந்தையில் புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமை நாட்களில் ஏலம் முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று சந்தைக்கு வாழைத்தார்கள் வரத்து கணிசமாக குறைந்திருந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, நேந்திரம் கிலோ ரூ.50, கதிலி கிலோ ரூ.54 வரையிலும் ஏலம் போனது. பூவன் பழம் தார் ஒன்று ரூ.400 முதல் ரூ.600 வரையும், தேன் வாழை ரூ.500 முதல் ரூ.800 வரையும், செவ்வாழை ரூ.600 முதல் ரூ.900 வரையும், ரஸ்தாளி ரூ.400 முதல் ரூ.650 வரையும் விற்பனை யானது.
இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், கடந்த வாரத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பா ளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான வாழை மரங்கள் சரிந் துள்ளதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் வாழைத்தார் வரத்து கணிசமாக குறைந்துள்ளதால், விலை சற்று அதிகரித் துள்ளது, என்றனர்.