ஈரோடு, டிச. 19- முத்தூர்-காங்கயம் கூட்டு குடி நீர் திட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை வேலை செய்ய அனுமதி மறுப்பதாக சிஐடியுவினர் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவ லரிடத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், முத்தூர்-காங்கயம் கூட்டு குடிநீர் திட்ட பணி கள் நடைபெற்று வருகிறது. இதில் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங் களில் உள்ள 3 நகராட்சி, 8 பேரூ ராட்சிகள் மற்றும் 1790 குடியிருப்பு கள் பயன்பெறும். இத்திட்டத்தில் 1998 முதல் தினக்கூலி பணியாளர் களாக பணி புரிந்த தொழிலாளர்கள், காலப்போக்கில் வாரியம் ஒப்பந்த முறையை புகுத்திய பிறகு ஒப்பந்த பணியாளர்களாக பணி புரிந்து வந்தனர். கடந்த 11 மாதங்களாக ஆர்பிபி குரூப் ஆப் கம்பெனி ஒப்பந்தம் எடுத்து இத்திட்டத்தை செயல் படுத்தி வருகின்றனர். மாதாந்திர ஊதியம் உரிய தேதியில் வழங்கப் படுவதில்லை. நிர்வாகப் பொறி யாளர் மற்றும் கண்காணிப்பு பொறி யாளர்களிடம் முறையிட்ட பிறகு தான் வழங்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் இதே பிரச் சனை எழுந்தது. அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் பேசி முடிக்கப் படும் என உறுதி கூறப்பட்டதால் அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பலமுறை பேசிய பிறகு குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. அத்துடன் தகுதி யற்ற நபர்களை வைத்துக் கொண்டு ஊதியம் கேட்ட தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த உத்தரவிடுமாறு மாவட்ட வருவாய் அலுவலரிடம் சிஐடியு சார்பில் கொடுத்த மனுவில் கூறப்பட் டுள்ளது.