நாமக்கல், ஜூலை 24- ஒன்றிய பாஜக அரசு விதித்துள்ள பால், தயிர் மற்றும் அதன் உப பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை திரும்பப்பெற வேண்டும் என தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியு றுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய 5 ஆவது மாநாடு ஒன்றிய தலைவர் பி.ராமசாமி தலைமையில் தட்டாங் குட்டையில் நடைபெற்றது. சங்கத் தின் கொடியை மாவட்டக்குழு உறுப் பினர் பி.சண்முகம் ஏற்றி வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் ஏ.ஆதிநாராயணன் உரை யாற்றினார். வேலை மற்றும் வரவு - செலவு அறிக்கைகளை ஒன்றிய செய லாளர் எம்.தனேந்திரன் முன்வைத் தார். இம்மாநாட்டில், எலந்தக்குட்டை ஊராட்சி பெதக்காட்டூர், புதுப்பாளை யம் பகுதியில் சாயப்பூங்கா அமைப் பதை கைவிட வேண்டும். மேட்டூர் உபரிநீரை பயன்படுத்தி ஏரிகளை நிரப்பி, விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டும். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி, பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.42ம், எருமைப்பா லுக்கு ரூ.52ம் வழங்க வேண்டும். மாட்டு தீவனத்தை 50 சதவிகித மானிய விலையில் வழங்க வேண் டும். இலவச மின்சாரம் கேட்டு காத்தி ருக்கும் அனைத்து விவசாயிகளுக் கும் உடனடியாக மும்முனை மின்சா ரம் வழங்க வேண்டும். பால், தயிர் மற்றும் அதன் உபபொருட்களுக் கான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும் பப்பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து சங்கத்தின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய தலைவராக டி.மாணிக்கராஜ், ஒன் றிய செயலாளராக எம்.தனேந்திரன், ஒன்றிய பொருளாளர் வேலுச்சாமி, உதவித்தலைவர்களாக சண்முகம், பழனிசாமி, குப்புசாமி, கோவிந்த ராஜ், உதவிச்செயலாளர்களாக நாக ராஜ், தேவராஜன், கார்த்தி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். முடி வில், மாவட்ட செயலாளர் பி.பெரு மாள் நிறைவுறையாற்றினார். எஸ். கனகசண்முகம் நன்றி கூறினார்.