districts

img

தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைத்திடுக

கோவை, அக்.26- பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு தங்கத்திற்காக இறக்குமதி வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என கோவையிலுள்ள தங்க நகை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொழில் நகரமான கோவை தங்க நகை தயாரிப்பு தொழிலில் தேசிய அளவில் மட்டுமின்றி உலக ளவிலும் சிறந்து விளங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி  பண்டிகைக்கு தங்க நகைகள் விற் பனை மந்தமாக காணப்பட்ட நிலை யில், இந்த ஆண்டு விற்பனை சிறப் பாக இருந்ததாக தொழில்துறை யினர் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டி கைக்கு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஆடைகள், இனிப்பு வகைகள், பட்டாசு உள்ளிட்டவற்றுக் காக செலவு செய்தாலும் மக்கள் பலர் தங்க நகைகள் வாங்குதற்கு என தனி யாக சிறிது நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம். கொரோனா நோய்தொற்று பரவல் ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2 ஆண்டுகள் மிகவும் மந்த மாக காணப்பட்ட விற்பனை, இந்த  ஆண்டு மிகவும் சிறப்பாக இருந் தது. கடந்த அக்.21 ஆம் தேதி முதல்  அக்.23 ஆம் தேதி வரை 3 நாட்க ளில் மட்டும் தோராயமாக 1.5 டன்  எடையிலான தங்க நகைகள் விற் பனை செய்யப்பட்டுள்ளன. இவற் றின் மதிப்பு ரூ.750 கோடி ஆகும். மொத்தம் விற்பனை செய்யப்பட்ட நகைகளில் மாப்பிள்ளை மோதி ரம், பெண்களுக்கான மோதிரங்கள், தோடு உள்ளிட்ட சிறிய வகை தங்க  நகைகள் தான் அதிகம். இருப்பினும் இத்தைகய நகை களை அதிக மக் கள் வாங்கியதால் விற்பனை மிக  சிறப்பாக இருந்தது.  தீபாவளி கொண்டா டப்பட்டதால் கடந்த  ஞாயிற்றுக்கிழமை அனைத்து நகை கடை களும் இரவு வரை தொடர்ந்து  செயல்பட்டது. நகை விற்பனையை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும் 10 நாட்கள் வரை  தொடர்ந்து வியாபாரம் சிறப்பாக இருக்கும். இதற்கிடையே ஒன்றிய அரசு  தங்கம் இறக்குமதிக்கு 15 சதவிகிதம் வரி விதித்துள்ளது. பண்டிகை காலங் களை கருத்தில் கொண்டு வரியை குறைத்து நடைமுறைபடுத்தினால் வணிகர்களுக்கும், பொதுமக்களுக் கும் மிகுந்த பயன் தரும்; மகிழ்ச்சி அடைவார்கள், என்றனர்.