districts

img

14.36 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு

தாராபுரம், செப் .2- தாராபுரம் அருகே தனியார் ஆக்கிரமிப் பில் இருந்த 14.36 ஏக்கர் கோவில் நிலங் கள் இந்து சமய அறநிலையத்துறையினரால்  மீட்கப்பட்டது. தமிழகத்தில் கோயில் நிலங்கள் ஆக்கிர மிப்பில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஈடு பட்டு வருகின்றனர். தாராபுரம் சின்னக்காம் பாளையம் செல்வக்குமாரசாமி கோயிலுக்கு சொந்தமான  5ஏக்கர் 52 சென்ட் நிலத்தை 5  ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன் வந்து இந்து சமய அறநிலை யத்துறை அதிகாரிகளிடம் ஒப் படைத்தனர். இதன் சந்தை மதிப்பு ரூ. 83 லட்சம் ஆகும்.  மேலும் அம்மாபாளையம் அய் யனார் கோயிலுக்கு சொந்த மான 8 ஏக்கர் 70 சென்ட் நிலம்  காசிலிங்கபாளையத்தில் உள்ளது. அதை ஆக்கிரமித்து வைத்திருந்த மூவர் ஒப்படைத் தனர். இதன் மதிப்பு ரூபாய் 87 லட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை உத்தரவின் பேரில், திருப்பூர் உதவி ஆணையர் செல்வராஜ், நிலங்கள்  பிரிவு தாசில்தார் கோபாலகிருஷ்ணன், செயல் அலுவலர் சதீஷ், ஆய்வாளர் வடிவுக் கரசி ஆகியோர் நிலங்களை கையகப்படுத்தி  அந்த இடங்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட் டது.