திருப்பூர், மார்ச் 22 - இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் என்.ஆர்.கே.புரம் தோழர் ஏ.கே. கோபாலன் நிலையத்தில் மத நல்லிணக்க விருந்து நடத்தப்பட் டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகமான தோழர் ஏ.கே.கோபாலன் நிலையத்தில், அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் 35 பேரையும், ஏ.கே.ஜி. நிலைய மாலை நேர வகுப்பில் பங்கேற் கும் மாணவ, மாணவிகள் சுமார் 40 பேரையும் அழைத்து ஒரு நாள் இரவு விருந்து அளிக்கப்பட்டது. ஏ.கே.ஜி. நிலையத்தில் மாலை நேர வகுப்பை நடத்தும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் இந்த மத நல்லிணக்க விருந் துக்கு ஏற்பாடு செய்தனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் விழிப்பு எம்.நடராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வி.ஈஸ்வரமூர்த்தி, வடக்கு மாநகரக்குழு உறுப்பி னர் என்.மனோகரன் உள்பட கட்சி அணியினர் ஆதரவாளர் கள், அனுதாபிகளும் பங்கேற்றனர்.