கோவை, ஜூன் 23- முன்பகை காரணமாக ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு தீ வைத்த பாஜக, இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உள் ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட னர். கோவை, ராமநாதபுரம், சண் முகா நகரை சேர்ந்தவர் அனிஹ ரோன் (65). இவர் அந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் 4 ஆவது தளத்தில் வசித்து வருகிறார். கீழ் தளத்தை உக்கடத்தை சேர்ந்த சிக்கந்தர் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதில் சிக்கந்தர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி மாலை, சிக்கந் தர் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் நிறு வனம் தீப்பிடித்தது. இதனை கண்ட கட்டிடத்தின் உரிமையாளர் அனிஹ ரோன் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றார். மேலும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக் கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதுதொடர்பாக கட்டிட உரிமை யாளர் அனிஹரோன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில், ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு தீ வைத்தது உக் கடத்தை சேர்ந்த உஸ்மான் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சிக்கந்தர் வேலை விஷயமாக உஸ்மானிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனை உஸ்மான் திருப்பி கேட்ட போது, சிக்கந்தர் தனது நண்பர்களு டன் சேர்ந்து தாக்கியுள்ளார். இத னால் அவரை பழிவாங்க உஸ்மான் நினைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, தனது நண் பர்களான மணியக்காரம் பாளை யத்தை சேர்ந்த ரமேஷ் என்ற பி.டி. ரமேஷ், வீரகேளத்தை சேர்ந்த சபரி கிரிவாசன் (35), ராமநாதபுரத்தை சேர்ந்த அயோத்தி ரவி ஆகியோரி டம் தெரிவித்தார். பின்னர் 4 பேரும், எஸ்டேட் அலுவலகத்துக்கு சென்று, தீ வைத்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் களை தேடி வந்த நிலையில், கோவை யில் பதுங்கி இருந்த உஸ்மான், அவரது நண்பர்கள் பி.டி.ரமேஷ், சபரிகிரிவாசன், அயோத்தி ரவி ஆகி யோரை கைது செய்தனர். கைதான வர்களில் சபரிகிரிவாசன், அயோத்தி ரவி ஆகியோர் இந்து முன்னணியில் உறுப்பினராக இருப்பதும், பி.டி.ரமேஷ் பாஜகவில் உறுப்பினராக இருப்பதும் போலீஸ் விசாரணை யில் தெரியவந்தது. கைதான 4 பேரையும் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைக்கும் பணி யினை போலீசார் மேற்கொண்ட னர்.