நாமக்கல், மார்ச் 20- 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மே மாதத்தில் உடனடி தேர்வு வைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் மு.தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத் தில் அளித்த மனுவில் தெரிவித்தி ருப்பதாவது, தமிழக முழுவதும் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 13ஆம் தேதி தொடங் கியது. இந்த தேர்வை எழுத 8 லட் சத்து 75 ஆயிரம் மாணவ மாணவி கள், விண்ணப்பம் செய்திருந்த னர். இவர்களில் முதல் நாள் தமிழ் தேர்வை 49 ஆயிரத்து 559 மாணவ, மாணவிகள் எழுதவில்லை. நாமக் கல் மாவட்டத்தை பொறுத்தவரை யில் மாவட்டத்தில் உள்ள 200 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வசதியாக மொத்தம் 25 மையங்கள் ஏற்படுத்தி இருந்தன. இவற்றில் தனி தேர்வா ளர்கள் உட்பட மொத்தம் 13 ஆயி ரத்து 7 பேர் தமிழ் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் 18 ஆயிரத்து 201 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீத முள்ள 716 பேர் தேர்வு எழுத வர வில்லை. தனித்தேர்வாளர்களை பொறுத்தவரையில் மொத்தம் 105 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர் களில் 89 பேர் மட்டுமே தேர்வு எழுதி னர். மீதமுள்ள 16 பேர் தேர்வு எழுத வில்லை. இதைப்போல் ஆங்கிலத் தேர்வை பொறுத்தவரையில் மொத் தமாக 703 பேர் தேர்வு எழுத வில்லை. தனித்தேர்வாளர்களை பொறுத்தவரையில் 133 பேர் விண் ணப்பம் செய்திருந்தனர். இவர்க ளில் 117 பேர் மட்டுமே தேர்வு எழுதி னர். மீதமுள்ள 15 பேர் தேர்வு எழுத வில்லை. பெற்றோருக்கு துணை யாக விவசாயம் அல்லது வேறு பொருள் ஈட்டும் பணிகளில் ஈடு பட்டு அதிலிருந்து மீண்டு பள்ளி வர முடியாத நிலையில் உள்ளார்கள். புற சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு அக சூழ்நிலையில் அவர் கள் என்ன நிலையில் இருக்கிறார் கள் என அறிந்து அரசு செயல்பட வேண்டும். கல்வி துறை இவர்களை மீண்டும் தேர்வுக்கு அழைத்து தேர்வு பயத்தை போக்கி உடனடி யாக மே மாதத்திற்குள் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறு தேர்வு வைக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை பாது காக்க அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.