districts

img

காவல்துறை சார்பில் ரத்ததான முகாம்

கோவை, ஜூன் 21-  கோவை மாநகர காவல்துறை சார்பில் கோவைப்புதூர் அருகே 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வெள்ளி யன்று ரத்ததானம் செய்தனர்.  தமிழக காவல்துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளியன்று ரத்த தானம் செய்தனர். இதன்ஒருபகுதியாக, கோவை மாநகர காவல்துறை சார்பில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவைபுதூரில் உள்ள சிறப்பு காவல் படை முகாமில் ரத்த தானம் செய்தனர். இந்த ரத்ததான முகாமினை மாநகர  காவல் ஆணையாளர் சுமித் சரண், கோவை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அசோ கன் மற்றும் துணை ஆணையாளர் எல்.பாலாஜி சரவணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இம்முகாமில் காவல் ஆணையாளர் சுமித்சரண் மற்றும் துணை ஆணையாளர் எல்.பாலாஜி சரவணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரி களும் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.