districts

img

திருநர்களுக்கு 2 சதவிகிதம் இடஒதுக்கீடு

கோவை, ஜூன் 5- அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவ னங்களில் திருநர்களுக்கு 2 சதவிகிதம் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வர வேண்டும் என திருநர் அமைப்புகளின் வானவில் கூட்ட மைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கோயம்புத்தூர் பத்திரிகை யாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியா ளர் சந்திப்பில் கோவை வானவில் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கல்கி  சுப்பிரமணியம், சிவகுமார் ஆகியோர் கூறு கையில், தனிநபர்களின் உரிமைகளைக் கொண்டாடவும், பெருக்கவும் மற்றும் வலுப் படுத்தவும் ஜூன் மாதம் உலகம் முழுவதும்  “சுயமரியாதை மாதமாக” அங்கீகரிக்கப் படுகிறது. லெஸ்பியன், கே, பைசெக்சுவல், டிரான்ஸ், குயர், இன்டர்செக்ஸ், ஆரோ/ ஏஸ் தனிநபர்கள் பாலினம் மற்றும் பாலிர்பு  அடிப்படையிலான சிறுபான்மைக் குழு வைச் சேர்ந்தவர்கள், பெரும்பான்மை சமூ கத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வகை யான பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். இந்த சுயமரியாதை மாத நிகழ்வுகள் மூலம் பாலினம் மற்றும் பாலுணர்வை உள்ளடக் கிய உரையாடல்களை உருவாக்க முயல் கிறோம். திருநங்கைகள் நல வாரியத்தில் திருநம்பிகளை சேர்த்ததற்காக தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தன்பால் ஈர்ப்பாளர்கள் மற்றும் இரு பாலின ஆண்களை குறிவைத்து மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றுக்கு எதி ராக, குறிப்பாக கோவையில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களில் காவல் துறையி னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பெரும்பான்மை சமூகத்திலிருந்து தொடர்ந்து பல்வேறு வகையான பாகுபாடுகளை எல்ஜி பிடிக்யூ பிளஸ் பிரிவினர்  எதிர்கொள்கின்ற னர். வீட்டில் இருந்து வெளியேற்றப்படு வது போன்ற நெருக்கடியான சூழ்நிலை களின்போது அவர்களைப் பாதுகாக்க அனைத்து மாவட்டங்களிலும் தங்குமிட வச தியை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண் டும்.

அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற் றும் பல்கலைக்கழகங்கள் எல்ஜிபிடிக்யூ பிளஸ் உள்ளடக்கிய பாலியல் கல்வி வகுப் புகளை வழங்க வேண்டும். பெரும்பான்மை சக்திகளின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் அனைவருடனும் நாங்கள் ஒற்றுமையாக கைகோர்க்கிறோம்.  சாதி, வகுப்பு, மொழி, உணவுமுறை, இனம், மதம் மற்றும் பிற காரணிகளின் அடிப் படையில் மனித உரிமை மீறல்களை உறுதி யாக எதிர்க்கிறோம். அரசு வேலை, கல்வி  நிறுவனங்களில் திருநர்களுக்கு 2 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். தமிழ கத்தில் திருநர்கள் தங்கள் பெயர், பாலி னத்தை மாற்றுவதற்கு, அறுவை சிசிச்சைக் கான ஆதாரம் அல்லது மூன்றாம் பாலினத் தவர் நலவாரியத்திடமிருந்து ஓர் அடை யாள ஆவணத்தை சமர்ப்பிக்கும்படி வலியு றுத்துகின்றனர். கல்வி சான்றிதழில் பெயர், பாலின மாற்றம் கோரும் நபர்களிடம் மருத் துவச் சான்றிதழ்களை கேட்கின்றனர். இந்த  நடைமுறைகளை கைவிட வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்  கழகங்களில் ‘எல்ஜிபிடிக்யூ பிளஸ்’ உள்ள டக்கிய பாலியல் கல்வி வகுப்புகளை தொடங்க வேண்டும். அனைத்து பொது இடங்களிலும், அரசுக்கு சொந்தமான நிறு வனங்களிலும் பாலின நடுநிலை கழிப்பறை களை உருவாக்கிட வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துகிறோம். எல்ஜிபிடிக்யூ பிளஸ் நபர்களின் உரிமை களை கொண்டாடவும், வலுப்படுத்தவும் ஜூன் மாதம் உலகம் முழுவதும் சுயமரி யாதை மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு வரும் ஜூன் 18 ஆம் தேதியன்று திரளானோர் கலந்துகொள்ளும் பிரைட் பேரணி நடை பெற உள்ளது, என்றனர்.