districts

img

வெறிநாய்கடி தடுப்பூசி சிறப்பு முகாம்

பள்ளிபாளையம், பிப். 3- வெறிநாய்க்கடி தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளியன்று பள்ளிபாளையம் பகுதியில் நடைபெற்றது.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலாம் பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட, கரட்டாங்காடு, காவேரி  ஆர்.எஸ், பிரேம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில  மாதங்களாகவே, தொடர்ச்சியாக தெரு நாய்கள் அதிக ரித்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக, தெரு வில் சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று, பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்ததில், நால்வர் படுகாயம் அடைந்த னர். பாதிக்கபட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, தெருநாய்களை கட்டுப்படுத்த வேண் டும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நமது தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மேலும், ஆலாம் பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிபாளையம், ஒன்றியம் ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட, பிரேம் நகர் பகுதியில் வெறி நாய்க்கடி சிறப்பு தடுப் பூசி முகாம் வெள்ளியன்று நடைபெற்றது. இம்முகாமில், படைவீடு கால்நடை உதவி மருத்துவர், கால்நடை மருந்தாளுநர் குமரேசன், கால்நடை ஆய்வாளர் நிலையம் (1) கால்நடை மருந்தாளர் சமய சங்கிலி எஸ்.கதிர் வேல் உள்ளிட்ட  மருத்துவர்கள் இந்த சிறப்பு நோய் தடுப்பு தடுப்பூசி முகாமில் சுமார் 75க்கும் மேற்பட்ட வீட்டில் வளர்க் கப்படும் நாய்களுக்கு, தடுப்பூசிகளை போட்டனர்.  மேலும், அடுத்த கட்டமாக சாலையில் சுற்றித் திரியும்,  தெரு நாய்களுக்கு வெறிநோய் கடி தடுப்பூசி மற்றும்  கருத்தடை செய்வதற்கான பணிகள் துவங்க உள்ளதாக  ஆலாம்பாளையம் பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. 9 ஆவது வார்டு உறுப்பினர் ஜெய பாலாஜி, ஆலாம் பாளையம் பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் கே.வி. பாபு, ஆலாம்பாளையம் பேரூராட்சி அதிகாரிகள் உள்ளிட் டோர் உடனிருந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை, ஆலாம் பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.