திருப்பூர், அக்.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் திருப்பூர் வடக்கு ஒன்றிய 24 ஆவது மாநாட்டில் வடக்கு ஒன் றியச் செயலாளராக ஆர்.காளி யப்பன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் திருப்பூர் வடக்கு ஒன் றிய 24 ஆவது மாநாடு பெருமா நல்லூரில் என்.சங்கரய்யா மற்றும் சீத்தா ராம் யெச்சூரி நினைவு அரங்கத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ஒன் றியக்குழு உறுப்பினர் என்.இளங்கோ, மங்க லட்சுமி, பட்டுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் வ.என். முருகேசன் வரவேற்றார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் துவக்கி வைத்து பேசினார். மாநாட்டு அறிக்கையை செயலாளர் ஆர்.காளியப்பன் முன்மொழிந் தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.சவித்திரி உரையாற்றி னார். இதில், பெருமாநல்லூர் அரசு மருத்துவ மனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். திருப்பூர் வடக்கு பகுதி யில் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல் லூரி அமைக்க வேண்டும். திருப்பூர் ரயில் நிலையம் முதல் பெருமாநல்லூர் வரை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பறக்கும் பாலம் அமைக்க வேண்டும். அத்திக்க டவு அவிநாசி திட்டத்தில் விடுப் பட்டுள்ள குட்டைகளை இணைக்க வேண்டும். கூலி பாளையம் ரயில் நிலையத் தில் மீண்டும் ரயில்கள் நின்று செல்ல வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அனைத்து பகுதிகளிலும் அமைக்க வேண் டும். 4 ஆவது குடிநீர் திட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் முறையாக தண்ணீர் விநியோ கிக்க வேண்டும். வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், 14 பேர் கொண்ட வடக்கு ஒன் றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன் றியக்குழுவின் செயலாளராக ஆர்.காளியப் பன் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் திருப்பூர் மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உரை யாற்றினார். முன்னதாக தியாகி பன்னீர் செல்வம் நினைவிடத்தில் இருந்து ஜோதி எடுத்து வரப்பட்டு மாநாட்டு திடலில் வைக்கப்பட்டது. மூத்த தோழர் ப.ராஜு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.