districts

img

பொதுப்பணித்துறை ஏரி மேட்டை ஆக்கிரமித்து மதவாத கும்பல் அட்டூழியம்; திசை திருப்பல்

அவிநாசி, பிப்.9 - அவிநாசி அருகே மங்களம் சால ையில் அமைந்துள்ள ஏரி மேட்டுப் பகு தியை “சிவபுரம் சைவ மகாசபை அறக் கட்டளை” என்ற பெயரில் மதவாதக்  குழுவினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள னர். அவர்களுக்கு ஆதரவாகவும், பின் புலமாகவும் இந்து முன்னணியினர்  அந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி  பொதுப்பணித் துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களது திசை திருப்பல் முயற்சி உள்ளூர் மக்க ளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசி ஒன்றியம், மங்களம்  சாலையில் சுமார் 180 ஏக்கர் பரப்பளவில்  தாமரைக் குளம் அமைந்துள்ளது. அங்கு எவ்வித கட்டிடங்களும் இல்லா மல், கன்னிமார் சாமி மற்றும் விநாயகர் சிலை வைத்து உள்ளூர் மக்கள் வழி பாடு நடத்தி வந்தனர். இதில், முதியவர்  ஒருவர் பல வருடங்களாக பூஜை நடத்தி  வந்திருக்கிறார்.

அந்த முதியவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்து விட்டார். இதனை அறிந்த சிவபுரம் சைவ  மகாசபை அறக்கட்டளை என்ற பெய ரில் ஒரு குழுவினர், கன்னிமார், விநாய கர் அமைந்த குளத்தின் ஏரி மேடு அருகே  கூடாரம் அமைத்தனர். மேலும், கோவில்  பாதுகாப்பு என்று கூறி கதவுகளுடன் காம்பவுண்ட் சுவர் அமைத்துள்ளனர்.  இதன்பின் சிவபுரம் சைவ மகாசபை  அறக்கட்டளை என்று பெயர் பலகை  வைக்கப்பட்டு பெரிய அளவில் தீர்த்த  குட ஊர்வலம் மற்றும் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. அப்பொழுதே பொ துப்பணித் துறையினர் இப்பிரச்சனை யில் தலையிட்டு கட்டுமான ஆக்கி ரமிப்பை தடுத்திருக்க வேண்டும். எனி னும் அதிகாரிகள் கவனிக்காமல் விட்டு விட்டனர்.  இந்த சூழலில் அந்த இடத்தில்  பெரிய அளவில் உணவு கூடாரம் அமைக்கும் பணியை அவர்கள் தொடங்கியுள்ளனர். இதனை அறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர் வலர்கள் இந்த ஆக்கிரமிப்பு நட வடிக்கைகள் குறித்து பொதுப்பணித் துறைக்கு புகார் அளித்துள்ளனர். இதன் பிறகு, பொதுப்பணித்துறை அதி காரிகள் இரண்டு நாட்களுக்குள் ஆக்கி ரமிப்புகளை அகற்றுமாறு அறக்கட் டளையைச் சேர்ந்தவர்களிடம் கூறியுள் ளனர்.

 

இதற்கு அந்த குழுவைச் சேர்ந்த வர், பல லட்சம் ரூபாய் நான் இந்த இடத் தில் செலவு செய்துள்ளேன் என்று கூறி யுள்ளார். அந்த குழுவினருக்கு ஆதர வாக, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த கேசவன் மற்றும் அந்த  அமைப்பை சேர்ந்த சிலர் அங்கு வந்து  பொதுப் பணித் துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவிலை  இடிக்க கூறுகிறீர்களா என்று சொல்லி,  மற்ற மதத்தினர் வழிபடும் கோவில் களை எடுத்துவிட்டு, பின்பு இதனை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறி, பிரச் சனையைத் திசை திருப்பி குழப்பம் ஏற்ப டுத்த முயற்சித்துள்ளனர். இதற்கு பொதுப்பணித் துறையினர்,  கோவிலை இடிக்கக் கூறவில்லை. ஆக் கிரமிப்புகளை அகற்றத்தான் கூறுகி றோம் என்று பதில் கூறியதுடன், ஆக்கிர மிப்புகளை அகற்ற இரண்டு நாள் அவ காசம் வழங்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய  செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி கூறுகை யில், சென்னை உயர்நீதிமன்றம் நீர்  நிலை சார்ந்த பகுதிகளில் ஆக்கிர மிப்புகளை அகற்றுமாறு உத்தர விட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டத்தின் ஆவணங் களில், நீர்நிலை சார்ந்த பகுதிகள் என்று  இருந்தாலே, இப்போது எவ்வித நீராதா ரமோ, நீர் வழித்தடமோ இல்லாத நிலை யிலும் கூட பல குடியிருப்புகளை  அகற்றி உள்ளனர். ஆண்டாண்டு கால மாக குடியிருந்து வந்த சாமானிய பொது மக்கள் குடியிருப்புகளைக்கூட அகற்றி  உள்ளனர். இதில் அவிநாசி தாமரைக் குளம் ஏரி மேடு பகுதியைப் பொறுத்த வரை எவ்வித கட்டுமானமும் இல் லாமல் பொதுமக்கள் பல ஆண்டுகளாக  வழிபாடு நடத்தி வந்தபோது ஆக்கிர மிப்பு என்ற பிரச்சனை எழவில்லை.  அதுவே தனி ஒரு அறக்கட்டளை நிர்வா கம் என்று உள்ளே வந்து, கட்டிடத்தைக்  கட்டி ஆக்கிரமிப்பு செய்யும்போது தான் இது போன்ற பிரச்சனைகள் வரு கிறது. ஏரி மேடு  பலமாக இருந்தால் மட் டுமே நீர் நிலை தேங்கியிருக்கும். ஆக் கிரமிப்பு கட்டிடங்களை ஏற்படுத்தும்  போது ஏரி மேட்டில் விரிசல் ஏற்பட்டு  நீர்க்கசிவுகள் வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஏரி மேட்டை பாது காக்க மாவட்ட நிர்வாகம் , பொதுப்ப ணித்துறையினர் கூறியுள்ளபடி, உறு தியான முறையில் ஆக்கிரமிப்பை  அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்  அடிப்படையில் உண்மையிலேயே நீர் நிலை சார்ந்த பகுதியாக இருக்கும்  இந்த ஏரி மேடு பகுதியில் ஆக்கிரமிப்பை  அகற்றுவது அவசியம். எவ்வித நிர்பந் தம், குழப்பங்களுக்கும் இடம் அளிக்கா மல் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றார்.