கோவை, நவ.11- ஒழுங்குமுறை விற்பனைக் கூடங் கள் மூலமாக கடந்த மூன்று ஆண்டுக ளில் ரூ.620.13 கோடி மதிப்பிற்கு கொப் பரை தேங்காய்கள் கொள்முதல் செய் யப்பட்டுள்ளதென, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித் துள்ளார். கோவை மாவட்டம், கிணத்துக்கட வில், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டுவ ரும், ஒழுங்குமுறை விற்பனை கூடத் தில் விலை ஆதார திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். அப்போது பயனாளிகளி டம் இத்திட்டத்தின் பயன் குறித்து கலந்துரையாடினார். கோவை மாவட் டத்தில் பொள்ளாச்சி, நெகமம், செஞ் சேரி, ஆனைமலை மற்றும் கிணத்துக் கடவு, தொண்டாமுத்தூர் மற்றும் அன் னூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் கொப்பரை கொள்முதல் நிலையங்களாக செயல்பட்டு வரு கின்றன. கோவை மாவட்டத்திலுள்ள 10 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக 2022 - 23 ஆம் ஆண்டில் 14,669 விவசாயிகளிடம் இருந்து ரூ.184 கோடி மதிப்பிற்கு 17,400.15 மெ.டன் கொப் பரை தேங்காய்களும், 2023 - 24 ஆம் ஆண்டில் 20924 விவசாயிகளிடம் இருந்து ரூ.306.314 கோடி மதிப்பிற்கு 28205.75 மெ.டன் கொப்பரை தேங்காய் களும், 2024 - 25 ஆம் ஆண்டில் 8,175 விவசாயிகளிடம் இருந்து ரூ.129.824 கோடி மதிப்பிற்கு 11584.45 மெ.டன் கொப்பரை தேங்காய்களும் கொள் முதல் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.620.13 கோடி மதிப்பிற்கு 57,190.35 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டு 43,768 விவசாயிகள் பயன டைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவர் ஷிய மளா நவநீதகிருஷ்ணன், வேளாண் இணை இயக்குநர் வெங்கடாச்சலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) மல்லிகா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ. செந்தில் அண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.