districts

img

ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அரசானையாக வெளியிடுக

தருமபுரி, ஜூன் 19- ஏற்றுக்கொண்ட கோரிக்கை களை அரசானையாக வெளியிட  வேண்டும் என வலியுறுத்தி, சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தி னர் தருமபுரி, சேலம் மாவட்ட ஆட்சி யர்களிடம் மனு அளித்தனர். கட்டுமான நலவாரிய கூட்டத் தில் முத்தரப்பு கமிட்டி ஏற்றுக் கொண்ட கீழ்க்கண்ட கோரிக்கை களை காலதாமதமின்றி அரசாணை வெளியிட்டு சட்டமன்றத்தில் அறி விக்க வேண்டும். கட்டுமான நல வாரியத்தில் 1 ஆம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்தி ரூ.2 ஆயிரமாக வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த நாள் முதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  தொழிலாளர்களின் பணப்பயன் களை  விண்ணப்பித்த 30 நாட்களில்  பரிசீலனை செய்து வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைள் அடங் கிய மனுவினை அளித்தனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியை சந்தித்து மனு அளிக் கையில், சிஐடியு கட்டுமான சங்க மாவட்ட தலைவர் சி.சண்முகம், மாவட்ட செயலாளர் சி.கலாவதி, பொருளாளர் ஜெயராமன் உள் ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சேலம் கட்டுமான தொழிலாளர்க ளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சேலம் ஜில்லா கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில், சங்கத்தின் செயலாளர் செ. கருப்பண்ணன் உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்றனர்.