districts

பொதுப்பணித்துறை ஏரி மேட்டை ஆக்கிரமித்து மதவாத கும்பல் அட்டூழியம்; திசை திருப்பல்

அவிநாசி, பிப்.9 - அவிநாசி அருகே மங்களம் சாலை யில் அமைந்துள்ள ஏரி மேட்டுப் பகுதியை “சிவபுரம் சைவ மகாசபை அறக்கட்டளை” என்ற பெயரில் மத வாதக் குழுவினர் ஆக்கிரமிப்பு செய் துள்ளனர். அவர்களுக்கு ஆதரவா கவும், பின்புலமாகவும் இந்து முன்ன ணியினர் அந்த ஆக்கிரமிப்பை நியாயப் படுத்தி பொதுப்பணித் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் களது திசை திருப்பல் முயற்சி உள்ளூர்  மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற் படுத்தி உள்ளது. அவிநாசி ஒன்றியம், மங்களம் சாலையில் சுமார் 180 ஏக்கர் பரப்ப ளவில் தாமரைக் குளம் அமைந் துள்ளது. அங்கு எவ்வித கட்டிடங் களும் இல்லாமல், கன்னிமார் சாமி மற்றும் விநாயகர் சிலை வைத்து உள்ளூர் மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். இதில், முதியவர் ஒருவர் பல  வருடங்களாக பூஜை நடத்தி வந்திருக் கிறார். அந்த முதியவர் உடல்நலக்குறை வால் மரணம் அடைந்து விட்டார்.

இதனை அறிந்த சிவபுரம் சைவ மகா சபை அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு குழுவினர், கன்னிமார், விநாயகர் அமைந்த குளத்தின் ஏரிமேடு அருகே கூடாரம் அமைத்தனர். மேலும் கோவில் பாதுகாப்பு என்று கூறி கதவு களுடன் காம்பவுண்ட் சுவர் அமைத் துள்ளன. இதன்பின் சிவபுரம் சைவ மகாசபை அறக்கட்டளை என்று பெயர்  பலகை வைக்கப்பட்டு பெரிய அளவில்   தீர்த்த குட ஊர்வலம் மற்றும் குட முழுக்கு  நடத்தப்பட்டுள்ளது. அப் பொழுதே பொதுப்பணித் துறையினர் இப்பிரச்சனையில் தலையிட்டு கட்டு மானம் ஆக்கிரமிப்பை தடுத்திருக்க வேண்டும். எனினும் அவர்கள் கவனிக் காமல் விட்டு விட்டனர்.  இந்த சூழலில் அந்த இடத்தில் பெரிய அளவில் உணவு கூடாரம்  அமைக்கும் பணியை அவர்கள் தொடங் கியுள்ளனர்.இதனை அறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித் துறைக்கு புகார் அளித்துள்ளனர். இதன் பிறகு,  பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு களை அகற்றுமாறு அறக்கட்ட ளையைச் சேர்ந்தவர்களிடம் கூறி யுள்ளனர்.

இதற்கு அந்த குழுவைச் சேர்ந்தவர்,  பல லட்சம் ரூபாய் நான் இந்த இடத்தில் செலவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். அந்த குழுவினருக்கு ஆதரவாக, இந்து முன்னணி அமைப் பைச் சேர்ந்த கேசவன் மற்றும் அந்த  அமைப்பை சேர்ந்த சிலர் அங்கு வந்து  பொதுப் பணித் துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவிலை இடிக்க கூறுகிறீர்களா என்று சொல்லி,  மற்ற மதத்தினர் வழிபடும் கோவில் களை எடுத்துவிட்டு, பின்பு இதனை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறி,  பிரச்சனையைத் திசை திருப்பி  குழப்பம் ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். இதற்கு பொதுப்பணித் துறையினர்,  கோவிலை இடிக்கக் கூறவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றத்தான் கூறு கிறோம் என்று பதில் கூறியதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்ற இரண்டு நாள் அவகாசம் வழங்கிவிட்டு சென் றுள்ளனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தியிடம் கேட்டபோது, சென்னை உயர்நீதி மன்றம் நீர் நிலை சார்ந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சி யாக திருப்பூர் மாவட்டத்தின் ஆவணங் களில் நீர்நிலை சார்ந்த பகுதிகள் என்று இருந்தாலே, இப்போது எவ்வித நீராதாரமோ, நீர் வழித்தடமோ இல்லாத நிலையிலும் கூட பல குடியிருப்புகளை அகற்றி உள்ளனர்.

ஆண்டாண்டு காலமாக குடி யிருந்து வந்த சாமானிய பொதுமக்கள்  குடியிருப்புகளைக்கூட அகற்றி உள்ள னர். இதில் அவிநாசி - தாமரைக்குளம் ஏரி மேடு பகுதியைப் பொறுத்தவரை எவ்வித கட்டுமானமும் இல்லாமல் பொதுமக்கள் பல ஆண்டுகளாக வழி பாடு நடத்திவந்தபோது ஆக்கிரமிப்பு என்ற பிரச்சனை எழவில்லை. அதுவே  தனி ஒரு அறக்கட்டளை நிர்வாகம் என்று உள்ளே வந்து, கட்டிடத்தைக் கட்டி ஆக்கிரமிப்பு செய்யும்போது தான்  இது போன்ற பிரச்சனைகள் வருகிறது.  ஏரி மேடு  பலமாக இருந்தால் மட்டுமே  நீர் நிலை தேங்கியிருக்கும். ஆக்கிர மிப்பு கட்டிடங்களை ஏற்படுத்தும் போது ஏரி மேட்டில் விரிசல் ஏற்பட்டு நீர்க்கசிவுகள் வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஏரி மேட்டை பாது காக்க மாவட்ட நிர்வாகம் , பொதுப் பணித் துறையினர் கூறியுள்ளபடி, உறுதியான முறையில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்  அடிப்படையில் உண்மையிலேயே நீர் நிலை சார்ந்த பகுதியாக இருக்கும் இந்த  ஏரி மேடு பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றுவது அவசியம். எவ்வித நிர் பந்தம், குழப்பங்களுக்கும் இடம் அளிக் காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.