districts

img

கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி அலுவலகத்தில் அமர்ந்து பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

தாராபுரம், நவ - 16 தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட் சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட் டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி 6 ஆவது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்தின் கவனத் திற்கு கொண்டு செல்லப்பட்டும் நடவடிக்கை எடுக் காததை கண்டித்து ஊராட்சிமன்ற அலுவல கத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட் டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா னந்தம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பொதுமக்கள் பல்வேறு அடிப்படை வசதி கள் குறித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் 6 ஆவது வார்டில் ஆழ்துறை கிணற்றில் இருந்து மேல்நி லைத் தொட்டிக்கு செல்லும் பைப்லைன் உடைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இதையடுத்து பைப்லைன் சரி செய்வதற்காக பள்ளம் தோண்டப் பட்டது. அதன்பின் எந்த பணிகளும் செய்யப் படாமல் உள்ளது. இதனால் பள்ளத்தினால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பைப்லைனை சரிசெய்து பள்ளத்தை மூட நடவ டிக்கை எடுக்கவேண்டும். காவிரி கூட்டு குடி நீர் திட்டத்தின் மூலம் என்ஏஎஸ் நகர் மேல்நிலைத் தொட்டிக் கொடுக்கப்பட்ட இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. உடனடியாக இணைப்பு கொடுக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள 4 இணைப்பு சாலைகளும் மண் சாலையாகவே உள்ளது. அதை தார்சாலையாக மாற்றி தரவேண்டும். பூங்கா இடத் தை சீர் செய்து கம்பி வேலி அமைத்து குழந்தை கள் விளையாடுவதற்கு ஏற்ப மாற்றி தரவேண் டும். குப்பை வண்டியை முறையாக பராமரித்து குவிந்து கிடக்கும் குப்பைகளை தினந்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்கள் குறிப்பிட்ட மண் சாலை மற்றும் குடிநீர் பைப்லைனுக்காக பறிக்கப்பட்ட பள்ளத்தை பார்வையிட்டு உடனடியாக சரிசெய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர்.