சேலம், டிச.21- மாநில அளவிலான பம்பை இசைக்கும் போட்டிக்கு சேலம் அருகே உள்ள அரசுப்பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பேளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராகுல் என்பவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தோல் கருவியான பம்பை இசைக்கும் போட்டியில் கலந்து கொண்டு, சேலம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இதனைத்தொடர்ந்து மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இம்மாத இறுதியில் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர் ராகுலுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஞானகணேசன், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.