districts

img

அரசுப் பள்ளி ஆக்கிரமிப்பு: மீட்டுத் தர மக்கள் கோரிக்கை

தஞ்சாவூர், நவ.10- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூ ரணி ஒன்றியம் இடையாத்தி கிழக்கு தொடக்கப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டுத் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சி யர் ஆ.அண்ணாதுரைக்கு மனு அனுப்பி உள்ளனர்.  அம்மனுவில் கூறியிருப்பதா வது: “பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெயரில் உள்ள இடை யாத்தி கிழக்கு தொடக்கப் பள்ளிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து, மழைநீர் சேகரிப்பு தொட்டி, சுற்றுச்சுவர், மாணவர் களுக்கு கழிப்பறை போன்ற அரசு திட்டங்களை செயல்படுத்த விடா மல் தடுத்து வருகிறார்.  மேற்படி திட்டங்களை செயல் படுத்த அரசு பள்ளி இடத்தை அளவு செய்து நான்கெல்லை அமைத்துத் தர வேண்டும். இந்த பள்ளியில் மிக வும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட, ஏழை, எளிய கூலி விவசாயி களின் குழந்தைகள் 70 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

மாணவ- மாணவிகளின் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் அமைக்க தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத் தின் மூலம் மூன்று தொட்டிகள் அமைக்க கடந்த 26.10.2019 அன்று அதற்கான பணிகள் நடந்த போது ஆக்கிரமிப்பு நபர்கள் அரசு வேலை யை தடுத்து விரட்டி உள்ளனர்.  அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் மூலம் கட்டப் பட்ட புதிய கட்டிடம் எவ்வித பாது காப்பும் இன்றி, பள்ளி விடுமுறை நாட்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக, மது அருந்துவதும், சில தவறான செயல்களை இரவு நேரங்களிலும் ஆக்கிரமிப்பா ளர்கள் செய்து வருகின்றனர். இதற்கு காரணம் பள்ளிக்கு தடுப்பு சுவரோ, முள்வேலியோ இல்லாத தால் அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

 இப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் குடிசை அமைத்து மின்சார வசதி செய்துள்ளனர். மேலும், பள்ளியில் மாணவர்களின் தேவைக்காக அமைத்துள்ள குடிநீர் குழாய் மூல மாக, தென்னந்தோப்பிற்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்கி றார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக, ஆணையர் பெயரில் உள்ள அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமித்து தங்கள் வசம் வைத்துள்ளனர்.  இந்த இடம் தொடக்கத்தில் ஆசி ரியர் குடியிருப்பு, குழந்தைகள் நல மையம், கிராமச் சாவடி ஆகி யவை இருந்த இடமாகும். இவை அனைத்தும் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெயரில் பதி வுத்துறை மற்றும் வருவாய் துறை ஆவணங்களில் உள்ளது. எனவே, இந்த அரசுப் பள்ளி இடத்தை ஆக் கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, அரசின் திட்டங்கள் முழுமையாக, மாவட்ட நிர்வாகத்தின் உதவி யோடு செயல்படுத்தவும், ஏழை எளிய மாணவர்கள் பாதுகாப்புட னும் மகிழ்ச்சியுடனும் கல்வி கற்கும் வகையில் மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்” என அதில் கூறப் பட்டுள்ளது.  இம்மனுவில், பா.பழனி முரு கன், சி.நாடிமுத்து, எம்.செல்லவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கை யெழுத்திட்டுள்ளனர். மனுவின் நகல் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர், வட்டாட்சி யர், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், வட்டார கல்வி அலு வலர் ஆகியோருக்கும் அனுப்பப் பட்டுள்ளது.